• Download mobile app
05 May 2025, MondayEdition - 3372
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

150 ஆண்டுகளுக்கு பிறகு தோன்றும் சந்திர கிரகணம்

January 4, 2018 தண்டோரா குழு

உலகின் அரிய சந்திர கிரகணம் சுமார் 150 ஆண்டுகளுக்கு பிறகு,வரும் 31ம் தேதி தோன்றவுள்ளது.

இவ்வாண்டின் முதல் சந்திர கிரகணம், இம்மாதம் 31ம் தேதி நடுஇரவு வருகிறது.இந்த சந்திர கிரகணம் சுமார் 77 நிமிடங்கள் வரை நீடிக்கும். இதற்கு ‘Blue Moon’ என்று பெயர்.இது சுமார் 150 ஆண்டுகளுக்கு பிறகு தோன்றுகிறது.

மத்திய ஆசியா, கிழக்கு ஆசியா, இந்தோனேசியா, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளில் மாலை நேரத்தில், இந்த சந்திர கிரகணம் முழுமையாக தெரியும். அலாஸ்கா, ஹாவாய்,கனடா ஆகிய நாடுகளில் சந்திர கிரகணத்தின் தொடக்கம் முதல் இறுதி வரை காணமுடியும். வட மற்றும் மத்திய அமெரிக்காவில் சந்திரன் மறைவது தடைப்படும்.

வரும் 2028ம் ஆண்டு, டிசம்பர் 31ம் தேதி, இந்த அரிய சந்திர கிரகணம் மீண்டும் தோன்றும். அதன் பிறகு, வரும் 2037ம் ஆண்டு, ஜனவரி மாதம் 31ம் தேதி தோன்றும். இந்த இரண்டு சந்திர கிரகணமும் முழுமையாக காணப்படும்.

கடந்த 2009ம் ஆண்டு, டிசம்பர் மாதம் 31ம் தேதி, சந்திர கிரகணத்தின் எட்டு சதவீதம் பகுதி வானில் தெரிந்தது. கடந்த 1866ம் ஆண்டு, மார்ச் மாதம் 31ம் தேதி இந்த கிரகணம் கடைசியாக தோன்றியது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க