• Download mobile app
31 Aug 2026, MondayEdition - 3855
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

என் அடுத்த ’எய்ம்’ ‘300’ தான்: ரோகித் சர்மா!

January 2, 2018 tamilsamyam.com

ஒருநாள் கிரிக்கெட்டில் முச்சதம் அடிப்பதே தனது இலக்கு என இந்திய துவக்க வீரர் ரோகித் சர்மா தெரிவித்துள்ளார்.

தென் ஆப்ரிக்கா சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி 3 டெஸ்ட், 6 ஒருநாள், 3 டி-20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. இதன் முதல் டெஸ்ட் போட்டி வரும் ஜனவரி 5ல் கேப்டவுனில் துவங்குகிறது.

இத்தொடருக்காக இந்திய அணி வீரர்கள் கடுமையான பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் ஒருநாள் போட்டியில் மூன்று இரட்டைசதம் விளாசி உலக சாதனை படைத்த இந்திய அணியின் துவக்க வீரர் ரோகித் சர்மா, முச்சதம் அடிப்பது சாத்தியமே என தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ரோகித் சர்மா கூறுகையில்,

“தற்போதுள்ள சூழ்நிலையில் ஒருநாள் போட்டியில் எதுவும் சாத்தியம் தான். நான் 264 ரன்கள் அடித்த போது வெறும் 36 ரன்களில் 300 ரன்கள் எட்ட முடியாமல் போனது. ஆனால் 264 ரன்கள் சாத்தியமாகும் போது ஏன் 300 ரன்கள் சாத்தியமில்லையா? தொடர்ந்து டி-20 அரங்கில் அதிவேக சதம்விளாசிய போது அனைவரும் டி-20 அரங்கில் 200 ரன்கள் சாத்தியமா என சிந்திக்க துவங்கினர். அதனால் தற்போதைய கிரிக்கெட்டில் எல்லாத்துக்கும் சாத்தியம் தான். உங்கள் நாளாக அது அமையும்பட்சத்தில் எதையும் சாதிக்கலாம்.” என்றார்.

மேலும் படிக்க