• Download mobile app
02 May 2025, FridayEdition - 3369
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

தி.மு.க வை கிண்டலடிக்கும் சமூக ஊடகவாசிகள்.

March 11, 2016 வெங்கி சதீஷ்

நேற்று தே.மு.தி.க தனித்து போட்டி எனக் கூறியதில் இருந்து அந்தக் கட்சியை கூட்டணிக்கு அளித்த அனைத்து கட்சினரையும் சமூக ஊடகங்களில் கிண்டலடித்து வருகின்றனர்.

இதில் அதிகமாகச் சிக்கியது தி.மு.க தான். ஏனெனில் தே.மு.தி.க இதோ கூட்டணியில் சேர்ந்துவிட்டது, பழம் கணிந்து கொண்டு இருக்கிறது பாலில் விழும் என ஏகத்திற்குப் பேசியதோடு மட்டுமன்றி, காங்கிரஸ் கட்சியினரும் முக்கியமாக குஷ்புவும் அவர் எங்கள் கூட்டணிக்கு வருவார் என உறுதி தெரிவித்தனர்.

இதனால் தி.மு.கவை அதிகமாக வருத்தெடுக்கின்றனர். அதில் கலைஞர் வீட்டருகே பழம் விற்பவர் வரும்போது அவரைக் கட்சியினர் துரத்துவது போலவும், அனைவரும் விஜயகாந்த் அல்வா கொடுப்பது போலவும் சித்தரித்து உள்ளனர்.

மேலும் விஜயகாந்தின் குளியலறையில் எட்டிப்பார்க்கும் கலைஞர் தனியாகவா நிற்கிறாய் எனக் கேட்பது போலவும் அதற்கு அவர் திட்டுவது போலவும் சித்தரிக்கப்பட்டுள்ளது. அதோடு பழம் எனச் சொல்லி மட்டும் சுமார் 50க்கும் அதிகமான கமெண்டுகள் வந்துள்ளன.

இதில் மேலும் ஒரு சில இடங்களில் சுவர் விளம்பரங்களில் தே.மு.தி.க பெயரையும் சேர்த்து தி.மு.கவினர் சுவர் விளம்பரம் எழுதி இருப்பது விமர்ச்சகர்களுக்கு வசதியாக இருக்கிறது.

மேலும் படிக்க