• Download mobile app
03 Feb 2026, TuesdayEdition - 3646
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தி.மு.க வை கிண்டலடிக்கும் சமூக ஊடகவாசிகள்.

March 11, 2016 வெங்கி சதீஷ்

நேற்று தே.மு.தி.க தனித்து போட்டி எனக் கூறியதில் இருந்து அந்தக் கட்சியை கூட்டணிக்கு அளித்த அனைத்து கட்சினரையும் சமூக ஊடகங்களில் கிண்டலடித்து வருகின்றனர்.

இதில் அதிகமாகச் சிக்கியது தி.மு.க தான். ஏனெனில் தே.மு.தி.க இதோ கூட்டணியில் சேர்ந்துவிட்டது, பழம் கணிந்து கொண்டு இருக்கிறது பாலில் விழும் என ஏகத்திற்குப் பேசியதோடு மட்டுமன்றி, காங்கிரஸ் கட்சியினரும் முக்கியமாக குஷ்புவும் அவர் எங்கள் கூட்டணிக்கு வருவார் என உறுதி தெரிவித்தனர்.

இதனால் தி.மு.கவை அதிகமாக வருத்தெடுக்கின்றனர். அதில் கலைஞர் வீட்டருகே பழம் விற்பவர் வரும்போது அவரைக் கட்சியினர் துரத்துவது போலவும், அனைவரும் விஜயகாந்த் அல்வா கொடுப்பது போலவும் சித்தரித்து உள்ளனர்.

மேலும் விஜயகாந்தின் குளியலறையில் எட்டிப்பார்க்கும் கலைஞர் தனியாகவா நிற்கிறாய் எனக் கேட்பது போலவும் அதற்கு அவர் திட்டுவது போலவும் சித்தரிக்கப்பட்டுள்ளது. அதோடு பழம் எனச் சொல்லி மட்டும் சுமார் 50க்கும் அதிகமான கமெண்டுகள் வந்துள்ளன.

இதில் மேலும் ஒரு சில இடங்களில் சுவர் விளம்பரங்களில் தே.மு.தி.க பெயரையும் சேர்த்து தி.மு.கவினர் சுவர் விளம்பரம் எழுதி இருப்பது விமர்ச்சகர்களுக்கு வசதியாக இருக்கிறது.

மேலும் படிக்க