• Download mobile app
12 Sep 2025, FridayEdition - 3502
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசிடம் நடிகர் ரஜினி வலியுறுத்த வேண்டும் – அன்புமணி ராமதாஸ்

December 30, 2017 தண்டோரா குழு

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசிடம் நடிகர் ரஜினி வலியுறுத்த வேண்டும் என பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
கடந்த 5 நாட்களாக தனது ரசிகர்களை சந்தித்து புகைபடம் எடுத்து வரும் ரஜினிகாந்த் தனது அரசியல் பிரவேசம் குறித்து நாளை அறிவிக்கவுள்ளதாக கூறியிருந்தார்.

இந்நிலையில், மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ்,ரஜினி அரசியலுக்கு வந்தாலும் சரி, வராவிட்டாலும் சரி; ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். ரஜினி அரசியலுக்கு வரவுள்ளதாக நீங்கள் தான் சொல்கிறீர்கள் முதலில் அவர் சொல்லட்டும். இன்று தமிழ் நாடு ஐசியூவில் உள்ளது.

தமிழ்நாட்டை காப்பாற்ற நிறையப்பேர் தேவை.தேவைபட்டால் ரஜினியும் அரசியலுக்கு வந்தால் நல்லது என்றார்.மேலும் காவிரி மேலாண்மை அமைக்க மத்திய அரசிடம் நடிகர் ரஜினி வலியுறுத்த வேண்டும் எனவும் அன்புமணி தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க