• Download mobile app
05 May 2025, MondayEdition - 3372
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

முத்தலாக் விஷயத்தில் மத்திய அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்த டிடிவி தினகரன்

December 30, 2017 தண்டோரா குழு

முத்தலாக் சட்டத்தை அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்ல முஸ்லிம்களின் கருத்துகளை கேட்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு தினகரன் எம்எல்ஏ கோரிக்கை விடுத்துள்ளார்.

ஆர்.கே நகர் இடைத்தேர்தலில் தினகரன் சுயேச்சையாக போட்டியிட்டு அமோக வெற்றி வெற்றார். இதற்கிடையில், இஸ்லாமியப் பெண்களின் திருமண பாதுகாப்பு உரிமையை காக்கும் வகையில் மத்திய அரசு முத்தலாக் தடை சட்டத்தை கொண்டு வந்துள்ளது. இந்த தடைச் சட்டம் கடந்த இரு நாட்களுக்கு முன்பு மக்களவையில் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது. இதற்கு பலவித எதிர்ப்புகள் கிளம்பின.இந்நிலையில், முத்தலாக் விஷயத்தில் மத்திய அரசுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் டிடிவி தினகரன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில்,

முத்தலாக், சட்டவிரோதம் என்று அறிவிக்கும் வகையில் மத்திய அரசு இஸ்லாமிய பெண்கள் திருமண பாதுகாப்பு சட்ட மசோதாவை அவசர கோலமாகவும், அலங்கோலமாகவும் கொண்டு வந்திருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும்.

இந்தியத் துணைக் கண்டத்தை பொருத்தமட்டில் அனைத்து மதங்களும் சம உரிமையோடும் பல வேறுபட்ட பண்பாட்டையும் நாகரீகத்தையும் கொண்டு வேற்றுமையில் ஒற்றுமை என்பதே தமிழகத்தின் தனிச்சிறப்பு.

இதில் இஸ்லாமிய மக்களின் சம்பிரதாயமான முத்தலாக் முறையில் பாதிப்போ,குறைபாடோ இருக்குமேயானால் அதனை அம்மதத்தினை தழுவிய மக்களின் கருத்தினைக் கேட்டு அதன்படி ஒரு பாதுகாப்பு அம்சத்தோடு வழங்குவதுதான் ஏற்புடையதாக இருக்கும். அதுதான் முறையும் கூட. எனவே அதீத தீவிரத்தோடு கொண்டு வரப்பட்டுள்ள இஸ்லாமிய பெண்கள் திருமண பாதுகாப்பு சட்ட மசோதாவை அனைத்து இஸ்லாமியர்களின் கருத்தை கேட்ட பிறகே அடுத்த கட்டத்தை நோக்கி எடுத்து செல்ல என மத்திய அரசை கேட்டுக் கொள்கிறேன் என்று அறிக்கையில் தினகரன் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் படிக்க