• Download mobile app
19 Aug 2025, TuesdayEdition - 3478
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டி: சென்னை அணிக்கு 5வது வெற்றி

December 29, 2017 tamil.samayam.com

இந்தியன் சூப்பா் லீக் கால்பந்து தொடாின் லீக் சுற்று ஆட்டத்தில் ஜேம்ஷெத்பூா் அணியை சென்னை எப்.சி. அணி 1-0 என்ற கணக்கில் வீழ்த்தி 5வது வெற்றியை பதிவு செய்தது.

10 அணிகள் பங்கேற்றுள்ள 4வது இந்தியன் சூப்பா் லீக் கால்பந்து போட்டி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நேற்று இரவு 8 மணிக்கு ஜேம்ஷெத்பூாில் நடைபெற்ற 33வது லீக் போட்டியில் சென்னை எப்.சி. அணியும், ஜேம்ஷெத்பூா் எப்.சி. அணியும் மோதிக் கொண்டன.

இப்போட்டியின் முதல் பாதிநேர ஆட்டத்தின் 41-வது நிமிடத்தில் சென்னை அணிக்கு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. அந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திகொண்ட நட்சத்திர ஆட்டக்காரா் ஜேஜே கோல் அடித்தார். இதனால் முதல் பாதிநேர ஆட்டத்தின் முடிவில் சென்னை 1-0 என முன்னிலை பெற்றது.

தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது பாதிநேர ஆட்டத்தில் இரு அணியினரும் மேற்கொண்டு கோல் அடிக்காததால் 1-0 என்ற கோல் கணக்கில் சென்னையின் எப்.சி. அணி வெற்றி பெற்றது. இதன்மூலம் சென்னை அணி புள்ளிபட்டியலில், 16 புள்ளிகளுடன் முதல் இடத்தை தக்கவைத்து கொண்டது.

மேலும் படிக்க