• Download mobile app
08 May 2026, FridayEdition - 3740
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோழி சாப்பிட்டதால் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் மரணம் ? போலீசார் விசாரணை

December 22, 2017 தண்டோரா குழு

ஆந்திராவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளனர்.

ஆந்திரா மாநிலம் வாரங்‌கல் மாவட்டம் திருமலகிரியுலுள்ள ராஜபேட்டையில் கோழிபண்ணையில் பால்ராஜ் என்பவர் கடந்த ஒரு மாதத்திற்கு முன் குடும்பத்துடன் வேலைக்கு சேர்ந்துள்ளார். அங்கேயே அவர்கள் தங்கி பணியாற்றி வந்துள்ளனர்.

நேற்றிரவு உறவினர் வந்ததால் பண்ணையிலிருந்து கோழி ஒன்றை சமைத்து உண்டுள்ளனர்.
இந்நிலையில், பால்ராஜ் குடும்பத்தினர் 7 பேரும் உயிரிழந்தது தெரியவந்துள்ளது.

இதையடுத்து, இரவில் அவர்கள் சாப்பிட்ட கோழி உணவால் மரணமா? கடன் தொல்லை காரணமா என காவல்துறை விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் படிக்க