• Download mobile app
06 Nov 2025, ThursdayEdition - 3557
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தெலுங்கான முதலமைச்சருக்கு இவாங்கா டிரம்ப் எழுதிய நன்றி கடிதம்

December 19, 2017 தண்டோரா குழு

அமெரிக்க குடியரசு தலைவரின் மகள் இவாங்கா டிரம்ப் தெலங்கான முதலமைச்சருக்கு எழுதிய நன்றி கடிதம் வெளியாகியுள்ளது.

அமெரிக்க குடியரசு தலைவரின் மகள் இவாங்கா டிரம்ப் கடந்த மாதம் 3 நாள் பயணமாக
ஹைதராபாத் நகரில் நடைபெற்ற உலகளாவிய தொழில் முனைவோர் உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக இந்தியா வந்திருந்தார். இந்நிகழ்ச்சிக்கு அமெரிக்காவில் இருந்து, சுமார் 36௦ உறுப்பினர்கள் கொண்ட அமெரிக்க தூது குழுவும்,கலந்துக்கொண்டனர். இந்நிகழ்ச்சியில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் தெலுங்கான முதலமைச்சர் சந்திரசேகர் ராவ் ஆகியோரும் அதில் கலந்துக்கொண்டனர்.

இந்நிகழ்ச்சிக்கு வருகைபுரிந்து போது அவர், ஹைதராபாத் நிஜாம் அரண்மனையில் தங்கவைக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டார். நிகழ்ச்சியில் பங்கேற்று இந்தியாவை விடைப்பெற்று சென்ற அவர் தற்போது தனது பயணத்தில் செய்யப்பட்ட ஏற்பாடுகள் குறித்து நன்றி தெரிவிக்கும் வகையில் தெலுங்கான முதல்வர் சந்திரசேகர ராவ் அவர்களுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

அந்த கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது

“3 நாள் பயணமாக நான் இந்திய வந்திருந்தபோது, நீங்கள் காட்டிய அன்புக்கும் விருந்தோம்பலுக்கு நன்றி கூறுகிறேன்.மீண்டும் இந்தியாவுக்கு திரும்புவதை எதிர்பார்த்து கொண்டிருக்கிறேன்” என்று அதில் தெரிவித்திருந்தார்.

மேலும் படிக்க