• Download mobile app
06 Nov 2025, ThursdayEdition - 3557
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

வெற்றி சின்னத்தை காட்டிய பிரதமர் மோடி

December 18, 2017 தண்டோரா குழு

இரண்டு மாநில தேர்தல்களிலும் பாஜகவுக்கு வெற்றி என்பதை வெளிப்படுத்தும் வகையில் பிரதமர் மோடி கையசைத்தார்.

பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள குஜராத் சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் வெளியாகி கொண்டிருக்கின்றன. மோடியின் சொந்த மாநிலமான குஜராத்தில் பாரதிய ஜனதா கட்சி முன்னிலை பெற்றுள்ளது. பாரதிய ஜனதா கட்சி 106 இடங்களிலும், காங்கிரஸ் 75 தொகுதிகளிலும் முன்னிலை பெற்றுள்ளது. குஜராத்தில் ஆட்சியை தொடர தேவையான 92 தொகுதிகளில் பா.ஜ.க. முன்னிலை வகிக்கிறது. இதனால் 6-வது முறையாக பாஜக ஆட்சியமைக்கும் என எதிர் பார்க்கப்படுகிறது.

அதைப்போல் இமாசலப்பிரதேசத்தில் பாரதிய ஜனதா கட்சி 41 தொகுதியிலும், காங்கிரஸ் கட்சி 22 இடங்களிலும் மற்றவை 5 இடத்திலும் முன்னிலை பெற்றுள்ளது.

இந்நிலையில், நாடாளுமன்றம் செல்லும் போது பிரதமர் நரேந்திர மோடி 2 மாநில தேர்தல்களிலும் பாஜகவுக்கு வெற்றி என்பதை வெளிப்படுத்தும் வகையில் இரட்டை விரலை காட்டி விட்டு நாடாளுமன்ற கூட்டத்துக்கு மோடி சென்றார்.

மேலும் படிக்க