• Download mobile app
08 May 2026, FridayEdition - 3740
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஆர்.கே நகரில் வாக்காளருக்கு கொடுப்பதற்காக வயிற்றில் பணத்தை கட்டி வைத்திருந்த அதிமுக பிரமுகர் கைது

December 16, 2017 தண்டோரா குழு

சென்னை ஆர்.கே. நகர் தொகுதிக்குட்பட்ட கொருக்குப்பேட்டையில் உள்ள பிசியோதெரபி கிளினிக்கில் 13 லட்சம் பணத்தை தேர்தல் பார்வையாளர்கள் பறிமுதல் செய்தனர்.

சென்னை ஆர்.கே.,நகரில் வரும் 21ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்கிடையில் அத்தொகுதியில் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்யபடுவதாக தொடர்ந்து புகார்கள் எழுந்தது. இதையடுத்து தேர்தல் அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், ஆர்.கே. நகர் தொகுதிக்குட்பட்ட கொருக்குப் பேட்டையில் உள்ள பிசியோதெரபி சென்டரில் வாக்காளருக்கு கொடுப்பதற்காக வயிற்றில் பணத்தை கட்டி வைத்திருந்த அதிமுகவை சேர்ந்த பச்சையப்பன் என்பவரை போலீசார் கைது செய்தனர். அப்போது அவரிடம் இருந்து வாக்காளர்களுக்கு வழங்க வைக்கப்பட்டிருந்த 13 லட்சம் ரூபாயும் அதிமுக வேட்பாளர் மதுசூதனுக்கு ஆதரவாக வாக்காளர்கள் பெயர் பட்டியலுடன் கூடிய பூத் ஸ்லிப்களையும் தேர்தல் பார்வையாளர்கள் மற்றும் காவல்துறையினர் கைபற்றி தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் படிக்க