• Download mobile app
08 May 2026, FridayEdition - 3740
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

மாணவி ஜிஷா கொலை வழக்கில் குற்றவாளிக்கு நாளை தண்டனை அறிவிப்பு

December 12, 2017 தண்டோரா குழு

மாணவி ஜிஷா கொலை வழக்கில் கைதான அசாம் வாலிபர் அம்ரூல் இஸ்லாம் குற்றவாளி என்று எர்ணாகுளம் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

கேரள மாநிலம் பெரும்பாவூரை ஊரைச் சேர்ந்தவர் சட்டக்கல்லூரி மாணவி ஜிஷா. இவர் கடந்த ஏப்ரல் மாதம் 28-ம் தேதி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டார்.

இச்சம்பவம் கேரள மட்டுமின்றி நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.இதையடுத்து, கொலை வழக்கு தொடர்பாக தீவிர விசாரணை மேற்கொண்ட கேரள போலீசார் சென்னையை அடுத்த காஞ்சிபுரத்தில் பதுங்கி இருந்த கட்டிட தொழிலாளி அம்ரூல் இஸ்லாமலை கைது செய்தனர்.

பின்னர், எர்ணாகுளம் முதன்மை செஷன்ஸ் நீதிமன்றத்தில் ஒன்றரை ஆண்டாக நடைபெற்று வந்த வழக்கு விசாரணையில் இன்று அம்ரூல் இஸ்லாம் குற்றவாளி என்று எர்ணாகுளம் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

இதனையடுத்து,அம்ரூல் இஸ்லாம் காண தண்டனை விவரங்கள் நாளை அறிவிக்கப்படும் என்று நீதிபதி தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க