December 4, 2017
தண்டோரா குழு
எல்லாமே சரியாக நடந்திருந்தால் நான் தேர்தலில் போட்டியிட வேண்டிய அவசியமில்லை என நடிகர் விஷால் கூறியுள்ளார்.
ஆர்.கே.நகர் தொகுதியில் டிசம்பர்21 ம் தேதி இடைத்தேர்தலில் சுயேட்சையாக போட்டியிடவுள்ள நடிகர் விஷால் இன்று வேட்புமனு தாக்கல் செய்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
அரசியல்வாதியாக இல்லாமல் ஆர்கே நகர் மக்களில் ஒருவனாக தேர்தலில் போட்டியிடுகிறேன்.எல்லாமே சரியாக நடந்திருந்தால் நான் தேர்தலில் போட்டியிட வேண்டிய அவசியமில்லை.
மக்களின் பிரச்னைகளை முன்னிலைப்படுத்தி தேர்தலில் வாக்கு கேட்கவுள்ளேன்.கட்சி தொடங்கியோ, மற்ற கட்சிகளோடு இணைந்தோ தேர்தலில் போட்டியிட வேண்டும் என்ற அவசியம் இல்லை. தயாரிப்பாளர் சங்கத்தில் நாங்கள் சொன்னதை செய்து உள்ளோம்.திரைத்துறையினர் யாரும் எனக்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்றார்.