• Download mobile app
24 Jun 2026, WednesdayEdition - 3787
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பீகாரில் எளிமையான திருமணம் நடத்திய துணை முதலமைச்சர்

December 4, 2017 தண்டோரா குழு

பீகார் மாநில துணை முதலமைச்சர் சுஷில் மோடி மகனின் எளிமையான திருமணம் பலருடைய பாராட்டைப் பெற்றுள்ளது.

பீகார் மாநிலத்தின் துணை முதலமைச்சர் சுஷில் மோடியின் மகன் உட்கர்ஷ் மற்றும் கொல்கத்தாவைச் சேர்ந்த யாமினிக்கும் நேற்று(டிசம்பர் 3) மிக எளிய முறையில் திருமணம் நடைபெற்றது.

இந்த திருமணத்திற்கு அழைப்பிதல்கள் அச்சிடப்படவில்லை.மேலும், வாட்ஸ்அப் மற்றும் ட்விட்டர் ஆகிய சமூக வலைத்தளங்கள் மூலம் திருமணத்திற்கு அழைப்பு தரப்பட்டது.திருமணத்திற்கு வருபவர்கள் அன்பளிப்புகள் எதையும் கொண்டு வர வேண்டாம் என்ற கோரிக்கையும் விடப்பட்டது.விருந்தாளிகளுக்கு மதிய உணவு விருந்தோ மற்றும் இரவு உணவு விருந்தோ வழங்கப்படவில்லை.

மேலும்,திருமணங்களின்போது, வரதட்சணை வாங்குவதற்கு எதிராக பேனர்களும், துண்டு பிரச்சாரங்களும், உடல் உறுப்புகளை தானம் செய்வதன் சிறப்புகள் மற்றும் முக்கியத்துவம் குறித்த துண்டு பிரச்சாரங்களும் வழங்கப்பட்டது.

இத்திருமணத்திற்கு பீகார் மாநிலத்தின் முதலமைச்சர் நிதிஷ் குமார், முன்னாள் முதலமைச்சர் லாலு பிரசாத் யாதவ்,மத்திய மந்திரிகளான அருண் ஜெட்லி, ஆனந்த் குமார், ராதா மோகன்சிங்,ராம் விலாஸ் பாஸ்வான், பீகார் ஆளுநர் சத்ய பல் மாலிக் மற்றும் மேற்கு வங்கத்தின் ஆளுநர் கேஸ்ரிநாத் திரிபதி ஆகியோர் கலந்துக்கொண்டு மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

மேலும் படிக்க