• Download mobile app
11 Sep 2025, ThursdayEdition - 3501
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை அருகே குடியிருப்பு பகுதியில் நுழைந்த காட்டு யானை

December 4, 2017 தண்டோரா குழு

கோவை அருகே குடியிருப்புகள் மற்றும் பொதுமக்கள் நடமாட்டம் நிறைந்த சாலையில் பகல் பொழுதில் உலா வந்த காட்டு யானையால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.

கோவையை அடுத்த தடாகம் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக காட்டு யானைகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது.இதனால்,அடிக்கடி கிராம பகுதிக்குள் யானைகள் நுழைந்து விடுகின்றன.

இந்நிலையில் நேற்றிரவு(டிச 3) ஒரு ஆண் காட்டு யானை கணுவாய் கிராமத்திற்குள் குடியிருப்பு பகுதியில் நுழைந்தது. இங்கு சுற்றி திரிந்த யானையை, வனத்துறையினர் விரட்ட முயன்றனர். இருப்பினும் யானை வனப்பகுதிக்குள் செல்லாமல், அதே பகுதியில் மீண்டும் மீண்டும் வந்தது.

இதைதொடர்ந்து இன்று காலையில் ஊருக்குள் நுழைந்த காட்டு யானை, குடியிருப்புகள் மற்றும் பொதுமக்கள் நடமாட்டம் நிறைந்த பகுதியில் உலா வந்தது.இதனையடுத்து அங்கு வந்த வனத்துறையினர் போராடி யானையை வனத்திற்குள் விரட்டினர்.வனத்தை ஒட்டிய பகுதியில் நுழைந்து வந்த யானை,இப்பொழுது பொதுமக்கள் அதிகமுள்ள ஊருக்குள் நுழைந்தது பொதுமக்களிடம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க