• Download mobile app
04 May 2025, SundayEdition - 3371
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

8 மணிநேரம் தாமதமாக விமானம் புறப்பட்டதால் பயணிகள் ஊழியர்களுடன் வாக்குவாதம்

December 2, 2017 தண்டோரா குழு

மும்பை விமானநிலையத்திலிருந்து புறப்பட ஏர் இந்தியா விமானம் தாமதம் ஆனதால், பயணிகள் விமான ஊழியர்களுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டனர்.

மும்பையில் உள்ள சத்ரபதி சிவாஜி சர்வதேச விமானநிலையத்திலிருந்து, அகமதாபாத் விமானநிலையத்திற்கு, 200 பயணிகளுடன் வெள்ளிக்கிழமை இரவு சுமார் ௦1:35 AI 031 என்ற விமானம் புறப்படுவதாக இருந்தது.
எதிர்பாரதவிதமாக, விமானத்தை இயக்க விமான ஓட்டுனர் யாரும் இல்லை என்பதால், விமானம் புறப்பட ஒருமணி நேரம் தாமதம் ஆனது. அதன் பிறகும், விமானத்தை இயக்க யாரும் இல்லை என்ற நிலை ஏற்பட்டது.

இதனால் கோபம் அடைந்த பயணிகள், விமான ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டனர். இதையடுத்து, விமானநிலையத்தில் உள்ள போர்டிங் பகுதியிலேயே, பயணிகள் இரவு நேரத்தை கழிக்க வேண்டிய நிலைக்கு ஆளானார்கள்.

“Flight Duty Time Limitation(FDTL) காரணமாகதான், விமானம் புறப்பட தாமதம் ஆனது. சுமார் 7 மணிநேரம் தாமதமாக, சனிக்கிழமை காலை 08:20 மணிக்கு விமானம் புறப்பட்டது” என்று ஏர் இந்திய நிறுவனத்தின் செய்திதொடர்பாளர் கூறியுள்ளார்.

விமான ஓட்டுனர்கள் மற்றும் விமான ஊழியர்களின் பணி நேரங்களை Directorate General of Civil Aviationஅமைக்கிறது. இதனால், அந்த பணி நேரத்தை மீறி, விமான ஓட்டுனர்கள் மற்றும் ஊழியர்கள் பணிபுரிய அனுமதி இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க