• Download mobile app
11 Sep 2025, ThursdayEdition - 3501
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பழைய ஒரு ரூபாய் நோட்டுக்கு இன்றுடன் 101 வயது

November 30, 2017 தண்டோரா குழு

பழைய ஒரு ரூபாய் நோட்டுக்கு இன்றுடன் 101 வயது ஆகிறது.

கடந்த 1917ம் ஆண்டு நவம்பர் 11ம் தேதி அச்சடிக்கப்பட்ட ஒரு ரூபாய் நோட்டுக்கு இன்றுடன் 101 வயது ஆகிறது.

முதலாம் உலகப் போரின்போது,1ரூபாய் நாணயத்தை குறியீட்டின் தோற்றத்தினால்,தயாரிக்க முடியாத நிலை ஏற்பட்டது. அதனால், குடியேற்ற நாட்டை சார்ந்த அதிகாரிகள்(Colonial Authorities) 1917ம் ஆண்டு 1 ரூபாய் நோட்டுகளை அச்சிட தொடங்கினர்.

கடந்த 1917ம் ஆண்டு நவம்பர் 30ம் தேதி முதல் 1 ரூபாய் நோட்டு அறிமுகப்படுத்தப்பட்டது. அந்த நோட்டில் அரசர் ஐந்தாம் ஜார்ஜின் புகைப்படத்துடன் வெளிவந்தது.ஆனால், Cost Benefit Analysis காரணமாக, கடந்த 1926ம் ஆண்டு முதல் அதை அச்சிடுவது நிறுத்தப்பட்டது என்று ரிசர்வ் வங்கி இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 1940ம் ஆண்டு முதல் மீண்டும் அந்த ரூபாய் நோட்டும் அறிமுகப்படுத்தப்பட்டது.மீண்டும் கடந்த 1994ல் அதை அச்சிடுவது நிறுத்தப்பட்டது.பின்னர் 2015ல் மீண்டும் கிடைத்தது.

இத்தனை முறை தன்னுடைய செயல் இழப்பை, இழந்த போதிலும், அது தனது தனித்துவத்தை தக்கவைத்துக் கொண்டுள்ளது. அந்த ரூபாய் நோட்டை இந்திய அரசாங்கத்தால் வழங்கப்படுகிறது ரிசர்வ் வங்கியால் அல்ல. மேலும், அதில் ரிசர்வ் வங்கியின் ஆளுநரால் கையெழுத்திடப்படவில்லை, ஆனால் நிதியியல் செயலாளரால் கையொப்பம் இடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க