• Download mobile app
24 Jun 2026, WednesdayEdition - 3787
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் 70வயது முதியவரின் நூதன பிரசாரம்!…

November 30, 2017 தண்டோரா குழு

கோவையில் தள்ளாடும்  காலத்திலும் வயதை பொருட்படுத்தாமல் தண்டோரா மூலம் மேற்கொள்ளப்படும் 70வயது முதியவரின் நூதன முறையிலான பிரசாரம் கவனத்தை பெற்று வருகிறது. 

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அடுத்த கோயில்பாளையத்தை சேர்ந்தவர் கோயாஸ் சுப்ரமணியம்(70).இவர் கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக அதிமுகவில் இணைந்து தண்டோரா மூலம் பிரசாரத்தை மேற்கொண்டு வருகிறார். கழுத்தில் கட்சி துண்டு, நடப்பதற்கு உதவும் கம்பில் கட்சிக்கொடி, உதட்டில் கட்சி கொள்கைகள் அடங்கிய பாடல்கள் என தோற்றமும், தள்ளாடும் வயதிலும் எந்தவித பிரதிபலனையும் எதிர்ப்பார்க்காமல் பிரச்சாரத்தை மேற்கொள்ளும் அவரின் செயல்களே கட்சி மீது வைத்துள்ள விசுவாசத்திற்கும், உழைப்பிற்குமான சாட்சி.காமராஜர் காலத்திலிருந்து அரசியலில் ஈடுபட்டு வரும் இவர், ஜெயலலிதா கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு அதிமுகவில் இணைந்து பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.

இதுகுறித்து அவர் கூறுகையில்,

“வயதால் ஏற்படும் வலிகள்  தன்னுடைய பிரசாரம் மூலம் பொதுமக்களுக்கு ஏற்படுத்தும் உற்சாகத்தை  தனக்கு கிடைக்கும் மகிழ்ச்சியாக பார்க்கிறேன்.மேலும் அதிமுக சார்பில் நடைபெறும் பொதுக்கூட்டங்கள், தேர்தல் பரப்புரை என அதிமுகவின் அனைத்து நிகழ்வுகள் குறித்தும் பறை அடித்து கொள்கைகளை பாடலாக பாடி பிரசாரம் செய்வேன். எனது உணவு மற்றும் உடை சுற்றுப்பயணம் என சொந்த செலவுகளை நானே கவனித்துக் கொள்வேன்.

கோவை நகரின் சாலைகள், பேருந்து நிலையங்கள் என மக்கள் அதிகம் கூடும் இடங்களில் பிரசாரம் செய்வேன்.கோவையில் வருகிற டிசம்பர் 3ம் தேதி நடக்கவிருக்கின்ற எம்ஜிஆர் நூற்றாண்டுவிழா குறித்த பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறேன்.மேலும்,ஆர்.கே நகரிலும் சென்று பிரச்சாரத்தில் ஈடுபடபோவதாகவும் தெரிவித்துள்ளார்”.  இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் படிக்க