• Download mobile app
04 May 2025, SundayEdition - 3371
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

வால்பாறையில் பத்தாண்டுகளாக செயல்படாமல் உள்ள இயற்கை உரக்கிடங்கு

November 29, 2017 தண்டோரா குழு

கோவை மாவட்டம் வால்பாறையில் பத்தாண்டுகளாக இயற்கை உரக்கிடங்கு செயல்படாமல் உள்ளது.

கோவை மாவட்டம் வால்பாறை ஸ்டேன்மோர் சாலை சந்திப்பு பகுதியில் கடந்த 2008-09 திமுக ஆட்சி காலத்தில் தமிழக அரசால் திடக்கழிவு மேலாண்மை திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இத்திட்டத்திற்காக 80 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டு அதற்காக தனி இடம் ஒதுக்கப்பட்டு, வால்பாறையில் உள்ள 21 நகராட்சிகளிலிருந்து குப்பைகள் கொண்டு வரப்பட்டு சேகரிக்கப்பட்டது.இத்திட்டம் துவங்கிய போது மட்டும் செயல்பட்ட இந்த உரக்கிடங்கு, கடந்த பத்தாண்டுகளாக செயல்படாமல் உள்ளது.

மேலும் அனைத்து வார்டுகளிலிருந்து குப்பைகள் கொண்டு வந்து உரக்கிடங்கில் கொட்டி வைக்கப்படுகிறது. தற்போது டன் கணக்கில் குப்பைகள் கொட்டப்பட்டும், அவை தரம் பிரக்கப்படாமலும், இயற்கை உரம் தயாரிப்பதற்கான பணிகள் நடைபெறாததால் தொடர்ந்து குப்பைகள் தேங்கி அந்த பகுதிகளில் கடுமையான நுர்நாற்றம் வீசுவதோடு  நோய் தொற்றும் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

மேலும்,பொதுமக்கள் அதிகமாக கூடக்கூடிய ஸ்டேன்மோர் சாலை சந்திப்பு அருகே பாரதியார் பல்கலைகழக கல்லூரி மற்றும் கடைகள் அமைந்துள்ளது.இத்திட்டமானது வால்பாறையில் தேங்கும் அனைத்து குப்பைகளையும் சேகரித்து, அதனை தரம் பிரித்து இயற்கை உரமாக தயாரித்து அதை தேயிலை தோட்டங்களில் பயன்படுத்தும் நோக்கில் கொண்டுவரப்பட்டது.

ஆனால்,தற்போது அவை செயல்படுத்தபடாமல் இருப்பதால் குப்பைகள் டன் கணக்கில் சேருவதோடு, நோய் தொற்றும் ஏற்பட்டு வருகிறது.

மேலும் படிக்க