• Download mobile app
04 May 2025, SundayEdition - 3371
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

ராஜஸ்தானில் அரசு மாணவர் விடுதிகளில் தேசிய கீதம் கட்டாயம்

November 29, 2017 தண்டோரா குழு

ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள பள்ளி விடுதிகளில் தேசிய கீதம் கட்டாயம் பாட வேண்டும் என ராஜஸ்தான் மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள அரசு மாணவர் விடுதி மற்றும் அரசு உதவி பெறும் மாணவர் விடுதிகளில் தேசியகீதம் கட்டாயம் பாடப்பட வேண்டும் என்று அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள மாநில சமூக நீதி மற்றும் மேம்பாட்டு துறை முதன்மை செயலர் சமித் ஷர்மா

“இந்த நடவடிக்கை மாணவர்களிடையே தேசிய வாத உணர்வை உருவாக்கும். காலை 7 மணிக்கு மாணவர்களின் ‘ஜன கன மன’ என்று தொடங்கும் நமது தேசய கீதத்தை பாடுவார்கள்.அந்த சமயத்தில் விடுதி காப்பாளரும் அதில் கலந்துகொள்ள வேண்டும்” என்று கூறினார்.

ஒவ்வொரு ஆண்டும், நவம்பர் மாதம் 26ம் தேதி, அரசியலமைப்பு தினமாக கொண்டாடப்படுகிறது. இவ்வாண்டு இந்த நாளில் புதிதாக தற்போது பிறபிக்கப்பட்ட உத்தரவு நடைமுறைக்கு வந்துள்ளது.

மேலும் ராஜஸ்தான் மாநிலத்தில் கிட்டத்தட்ட 800 அரசுபள்ளிகளில் உள்ள விடுதிகளில் சுமார் 40,000 மாணவர்கள் கல்விகற்று வருகிறார்கள். ஜெய்ப்பூர் மாநகர கார்போரசன், நாளின் தொடக்கத்திலும் நாளின் முடிவிலும் தேசிய கீதம் பாடும் பழக்கத்தை தொடக்கியது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க