• Download mobile app
24 Jun 2026, WednesdayEdition - 3787
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சோமனூரில் ஆசிரியை திட்டியதால் மாணவர் தூக்கு போட்டு தற்கொலை

November 28, 2017 தண்டோரா குழு

கோவை மாவட்டம் சோமனூரில் தனியார் பள்ளியில் ஆசிரியை திட்டியதால் 12 ம்வகுப்பு மாணவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

கோவை சோமனூர் ஆத்துப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் அருள்செல்வன்.இவர் கருமத்தாம்பட்டியில் உள்ள சென்னிமலை கவுண்டர் மெட்ரிக் பள்ளியில் 12 ம் வகுப்பு படித்து வருகின்றார்.

இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு மாணவர் அருள்செல்வனை முடி வெட்டாமல் வந்த காரணத்திற்காக பள்ளியின் வேதியல் துறை ஆசிரியை,சங்கீதா சக மாணவர்கள் முன்னிலையில் திட்டியதாக கூறப்படுகின்றது.இதில் மனவேதனையில் இருந்த மாணவன் அருள்செல்வன் நேற்று இரவு வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இரவு வேலை முடிந்து அருள்செல்வனின் தந்தை அண்ணாமலையும்,தாயும் வீட்டிற்கு வந்த போது மாணவர் உயிரிழந்து கிடப்பது தெரியவந்தது.இதனையடுத்து மாணவர் அருள்செல்வனின் உடல் கோவை அரசு மருத்துவமனைகரகு பிரேதப்பரிசோதனைக்காக அனுப்பப்பட்டது.

மாணவரின் தற்கொலைக்கு காரணமான ஆசிரியை சங்கீதா மீது நடவடிககை எடுக்க கோரி பெற்றோர்கள் கருமத்தாம்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.இதனையடுத்து மாணவனை தற்கொலைக்கு தூண்டியதாக ஆசிரியை சங்கீதா மீது வழக்கு பதிவு செய்துள்ள காவல்துறையினர் சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் படிக்க