• Download mobile app
08 May 2026, FridayEdition - 3740
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஆர்.கே.நகரில் போட்டியிட மதுசூதனன் விருப்ப மனு

November 28, 2017 தண்டோரா குழு

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிட அவைத் தலைவர் மதுசூதனன் விருப்ப மனு அளித்துள்ளார்.

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிடுவதற்கான விருப்ப மனுவை அவைத் தலைவர் மதுசூதனன் அக்கட்சியின் தலைமை கழகத்தில் இன்று(நவ 28) அளித்தார்.

ஆர்.கே.நகர் வேட்பாளரை தேர்வு செய்யும் அதிகாரம் புதிய ஆட்சிமன்ற குழுவுக்கு வழங்கப்பட்டுள்ளது.புதிய ஆட்சிமன்ற குழு ஆர்.கே.நகர் வேட்பாளரை தேர்வு செய்வது என்றும் இதற்காக போட்டியிட விரும்புபவர்களிடம் இருந்து விருப்ப மனு பெறுவது என்றும் முடிவு செய்யப்பட்டது.

இந்நிலையில் அ.தி.மு.க. அவைத் தலைவர் மதுசூதனன் இன்று காலை தலைமை கழகம் சென்று விருப்ப மனு அளித்தார்.ஏற்கனவே இவர் ஆர்.கே.நகர் தேர்தலில் ஓ.பி.எஸ். அணி சார்பில் போட்டியிட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க