• Download mobile app
08 May 2026, FridayEdition - 3740
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பாஜகவுடன் அதிமுக கூட்டணி வைத்தால் கூடா நட்பு கேடாய் முடியுமென – தமிமுன் அன்சாரி

November 27, 2017 தண்டோரா குழு

பாஜகவுடன் அதிமுக கூட்டணி வைத்தால் கூடா நட்பு கேடாய் முடியுமென சட்டமன்ற உறுப்பினர் தமிமுன் அன்சாரி தெரிவித்துள்ளார்.

கோவை வெள்ளலூர் பகுதியில் மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளரும், அதிமுக தோழமை கட்சி சட்டமன்ற உறுப்பினருமான தமிமுன் அன்சாரி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

அப்போது பேசிய அவர்,

ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் மனிதநேய ஜனநாயக கட்சி போட்டியிடாது, அத்தேர்தலில் எந்த கூட்டணிக்கும் ஆதரவு இல்லை. இந்நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இருக்காது. தமிழக அரசு மத்திய அரசிற்கு பணிந்து, மாநில உரிமைகளை விட்டு கொடுப்பதாக குற்றச்சாட்டு உள்ளது. பாஜகவுடன் அதிமுக கூட்டணி அமைத்தால், கூடா நட்பு கேடாய் முடியும் எனவும் கோவையில் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவிற்காக அமைக்கப்பட்ட அலங்கார வளைவில் மோதி ரகுபதி என்ற இளைஞர் உயிரிழந்தது வருத்தமளிக்கிறது. இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் படிக்க