• Download mobile app
06 Feb 2026, FridayEdition - 3649
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் சில்லறை தகராறில் கொதிக்கும் எண்ணெயை வாடிக்கையாளர்கள் மீது ஊற்றிய பானிபூரி கடைக்காரர்

November 27, 2017 தண்டோரா குழு

கோவையில் சில்லறை தகராறில் கொதிக்கும் எண்ணெயை வாடிக்கையாளர்கள் மீது பானிபூரி கடைக்காரர் ஊற்றி உள்ளார்.

கோவை மாவட்டம் சூலூர் மதியழகன் நகரை சேர்ந்தவகள் தீபக், திலீப், டேவிட், சேவியர். இவர்கள் நால்வரும் நேற்று இரவு அதே பகுதியில் சாலையோரத்தில் உள்ள பானி பூரி கடைக்கு சென்றுள்ளனர். அங்கு பானி பூரி சாப்பிட்டு பணம் கொடுத்துள்ளனர். அப்போது கடைக்காரருக்கும் அவர்களுக்கு சில்லறை தகராறு ஏற்பட்டுள்ளது.

இதில், கடும்கோபமடைந்த தள்ளுவண்டி கடைக்கார் கணேசன் இளைஞர்கள் மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியுள்ளார். இதனால் இளைஞர்கள் அலறியுள்ளனர். இதையடுத்து, அவர்களை அருகில் இருந்தவர்கள் மீட்டு சூலூர் அரசு மருத்துவமனையில் சேர்ந்துள்ளனர்.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு மும்பையில் ஒரு ஹோட்டலில் இதேபோன்று வாடிக்கையாளர்கள் மீது கொதிக்கும் எண்ணையை கொட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க