• Download mobile app
03 Jul 2025, ThursdayEdition - 3431
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் சாலை மறியல்!..

November 24, 2017 தண்டோரா குழு

கோவை தேவராயபுரம் அருகே ஊர்மக்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கோவை மாவட்டம் தேவராயபுரம் அருகேயுள்ள வெள்ளருக்கம்பாளையத்தில் சாலை விளக்குகள் எரியாததால் தான் யானை தாக்கி வாலிபர் இறந்ததாக் கூறி ஊர்மக்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

தேவராயபுரம் அருகேயுள்ள வெள்ளருக்கம்பாளையத்தில் நேற்றிரவு இயற்கை உபாதையை கழிக்கச்சென்ற சக்திவேல் என்பவரை யானை தாக்கியதில் சம்பவ இடத்திலேயே பலியானார். தகவலறிந்து வந்த வனத்துறையினர் காவல்துறைக்கு கொடுத்த தகவலின் அடிப்படையில் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதனையடுத்து அப்பகுதி மக்கள் சாலையிலுள்ள மின் விளக்குகள் எரியாததால் தான் சக்திவேல் இறந்துள்ளதாக தெரிவித்தனர். தேவராயபுரம் பகுதியிலிருந்து ஒரு கிலோ மீட்டர் தூரம் ஊருக்குள் இருட்டில் நடந்து வரும் சூழ்நிலை உள்ளதாக தெரிவித்தவர்கள் அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென தெரிவித்தனர்.

மேலும்,யானைகள் ஊருக்குள் வருவது தெரியவில்லை எனவே பாதுகாப்புப்கேட்டு பள்ளிக்குழந்தைகள் மற்றும் ஊர்பொதுமக்கள் மூன்று மணி நேரத்திற்கும் மேலாக சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதனையடுத்து அப்பகுதிக்கு வந்த காவல்துறையினர் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு மக்களின் குறைகளை அதிகாரிகளிடம் தெரிவித்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித்ததால் கலைந்து சென்றனர்.

மேலும் படிக்க