• Download mobile app
23 Mar 2026, MondayEdition - 3694
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ரேசன் கடைகளில் சர்க்கரை விலை உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம்

November 22, 2017

கோவையில் ரேசன் கடைகளில் சர்க்கரை விலை உயர்வை கண்டித்து திமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ரேசன் கடைகளில் சர்க்கரை விலை உயர்வை கண்டித்து திமுக சார்பில் மாநிலம் தழுவிய முற்றுகை போராட்டம் நடைபெற்றது.இதன் ஒரு பகுதியாக கோவை மாநகராட்சியின் 100 வார்டுகளிலும் உள்ள ரேசன் கடைகள் முன்பாக திமுக வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

கோவை மாநகராட்சியின் 93 வது வார்டு பகுதியான குனியமுத்தூர் பகுதியிலுள்ள ரேசன் கடை முன்பாக திமுக கோவை வடக்கு மாவட்ட செயலாளர் முத்துசாமி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது.இந்த ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட 70 பேர் கைது செய்யப்பட்டனர்.

இதேபோல் சிங்காநல்லூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கார்த்திக் தலைமையில் சித்தாபுதூர் பகுதியிலும் மற்ற பிற பகுதிகளும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இரண்டாயிரத்திற்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

மேலும் படிக்க