• Download mobile app
24 Jun 2026, WednesdayEdition - 3787
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ராஜஸ்தானில் பாதுகாப்புபடை காவலராக திருநங்கை நியமனம்

November 14, 2017 தண்டோரா குழு

ராஜஸ்தான் மாநிலத்தில் திருநங்கை கங்கா குமாரி முதல்முறையாக பாதுகாப்புபடை காவலராக
பதவியேற்கவுள்ளார்.

ராஜஸ்தான் மாநிலம் ஜாக்ஹாரி கிராமத்தை சேர்ந்தவர் கங்கா குமாரி(24). இவர் ஒரு திருநங்கை. கடந்த 2013ம் ஆண்டு, ராஜஸ்தான் காவல்துறையில் 12,178காவலரை ஆட்சேர்ப்புகான விளம்பரம் வெளியானது. அந்த பணிக்கு சுமார் 1,25,000 பேர் தேர்வு எழுதினர். அப்போது 22 வயதான கங்கா குமாரியும் தேர்வு எழுதினார். தேர்விலும் உடல் பரிசோதனையிலும் வெற்றி பெற்றார். ஆனால்,உடல் பரிசோதனை முடிவு வெளியானபோது, அவர் ஒரு திருநங்கை என்று தெரிய வந்தது. இதையடுத்து, அவருக்கு காவலர் பணி வழங்கப்படவில்லை.

இதையடுத்து கடந்த 2015ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில், ராஜஸ்தான் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அவருடைய வழக்கை விசாரித்த நீதிபதி,அவரை பணியில் சேர அனுமதி வழங்குமாறு காவல்துறைக்கு உத்தரவிட்டார். இதையடுத்து, ராஜஸ்தான் மாநிலத்தில் முதல்முறையாக திருநங்கை ஒருவர் பாதுகாப்பு படை காவலராக பொறுப்பேற்கவுள்ளார்.

கடந்த 2௦15ம் ஆண்டு, திருநங்கை சமூகத்தை மூன்றாவது பாலினமாக உச்சநீதிமன்ற ஒப்புக்கொண்டு, அவர்களுடைய சமூக மற்றும் பொருளாதார போராட்டத்தை கருத்தில்கொண்டு, அவர்களுக்கு கல்வி நிறுவனம் வேலைவாய்ப்புகளில் சிறப்பு ஒதுக்கீடு தரப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க