• Download mobile app
31 Aug 2026, MondayEdition - 3855
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

இந்திய அணியில் இடம் பிடிக்க நுழைவுத் தேர்வு: பிசிசிஐ

October 10, 2017 tamilsamayam.com

இந்திய கிரிக்கெட் அணியில் இடம்பெறும் வீரர்கள் கண்டிப்பாக உடல்தகுதியை நிரூபிக்கும் யோயோ டெஸ்டில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்று பிசிசிஐ தெரிவித்துள்ளது.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட யுவராஜ் சிங், சுரேஷ் ரெய்னா ஆகியோர் இடம்பெறவில்லை. இதனையடுத்து, அவர்கள் உடல்தகுதித் தேர்வில் தோற்றுவிட்டதாக தகவல் பரவியது.

இந்நிலையில், இந்திய கிரிக்கெட் அணியில் பெற யோயோ டெஸ்ட் எனப்படும் உடற்தகுதி சோதயை வெற்றிகரமாக பூர்த்திசெய்ய வேண்டும். இதற்கு எந்த வீரரும் விதி விலக்கு அல்ல. கண்டிப்பாக இதில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே இந்திய கிரிக்கெட் அணியில் இடம் கிடைக்கும் என்று பிசிசிஐ உறுதியாக அறிவித்துள்ளது.

அண்மையில், நடைபெற்ற இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கான யோயோ சோதனையில் விராட் கோலி அதிகபட்சமாக 21 மதிப்பெண் பெற்றார் என்றும் யுவராஜ் சிங் 16 மதிப்பெண் மட்டுமே பெற்றார் என்றும் தகவல் கிடைத்துள்ளது. குறைந்தபட்சம் 19.5 மதிப்பெண் எடுத்தால்தான் யோயோ தேர்வில் வெற்றி பெற முடியும்.

இதில் யுவராஜ், ரெய்னா ஆகியோர் தவறிவிட்டதால் இந்திய அணியில் இடம் பறிபோகிவிட்டது என்று கூறப்படுகிறது.

மேலும் படிக்க