• Download mobile app
19 May 2024, SundayEdition - 3021
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

சத்தீஸ்கர் மாகாணத்தில் நடந்த பிரமாண்ட மலர்க்கண்காட்சி

August 15, 2017 தண்டோரா குழு

சத்தீஸ்கர் மாகாணத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த பூக்கள் மற்றும் காய்கறிகள் கண்காட்சியை மக்கள் கண்டு ரசித்தனர்.

சத்தீஸ்கர் மாகாணத்தின் பிலாய் நகரிலுள்ள மைத்ரி பாக் என்னும் இடத்தில் பூக்கள் மற்றும் காய்கறிகளை கொண்டு, பலவிதமாக அலங்காரங்கள் செய்யப்பட்ட கண்காட்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. சத்தீஸ்கர் மாகாணத்தின் பல்வேறு இடங்களிலிருந்து ஆயிரக்கணக்கான மக்கள் வந்து, அதை கண்டு களித்தனர்.

அதில் Black Lady Rose, Dutch Rose, Kashmir Rose உள்ளிட்ட சுமார் 300 வகையான ரோஜா மலர்கள் இடம்பெற்றன. அந்த ரோஜாக்களை குறித்தும் அதன் பராமரிப்பு நுட்பம் குறித்து தோட்டக்கலை ஆய்வார்கள் கேட்டறிந்தனர். சிலர் அந்த ரோஜா மலர்களை வாங்கி சென்றனர்.

அங்கு நடந்த பூச்செண்டு தயாரித்தல் மற்றும் சாலட் அலங்காரம் போட்டியில், மக்கள் தங்களுடைய படைப்பு திறன்களை காட்டினர். பெண் குழந்தையை காப்பாற்றுங்கள் என்ற தலைப்பில் 3டி மூலம் போடப்பட்டிருந்த அழகிய கோலங்கள் அங்கு வந்திருந்த மக்களின் கவனத்தை கவர்ந்தது.

“அந்த மலர்கள் மிகவும் அழகாக வைக்கப்பட்டும் நன்கு பராமரிக்கப்பட்டும் இருந்தது. இது போன்ற அரிய வகை பூக்களை தினமும் பார்க்க இயலாது. பூக்களை கொண்டு செய்யப்பட்டிருந்த பறவை வடிவம் கண்கவர் காட்சியாக இருந்தது. இந்த அலங்காரங்களை கிடைத்த தகவல்கள் மிகவும் உதவியாக இருந்தது” என்று அங்கு வந்திருந்த பெண்மணி தெரிவித்தார்.

“இது போன்ற அற்புதமான கோலங்களை முதல் முறையாக பார்த்தேன். 3டி நுட்பத்தை பயன்படுத்தி போடப்பட்டிருந்த கோலங்கள், ஒரு கலைஞரின் கடின உழைப்பை காட்டுகிறது” என்று அங்கு வந்திருந்த மற்றொரு பெண் தெரிவித்தார்.

மேலும் படிக்க