20 வருஷத்துல எந்த கேப்டனும் சாதிக்காத விஷயத்த இந்திய அணி கேப்டன் விராத் கோலி சாதித்துள்ளார் என பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார்.
இலங்கை சென்றுள்ள இந்திய அணி, முதலில் 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. இரு அணிகள் மோதிய முதல் டெஸ்ட் போட்டி காலேவில் நடந்தது. இதில் கோலி தலைமையிலான இந்திய அணி, அந்நிய மண்ணில் இதுவரை இல்லாத அளவு இமாலய வெற்றியை ( 304 ரன்கள் ) பதிவு செய்து சரித்திரம் படைத்தது.
இந்நிலையில் இந்த வெற்றியை இந்திய வீரர்கள் சிறப்பாக கொண்டாடினர். இந்நிலையில் இந்த வெற்றி குறித்து இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, இதுவரை இந்திய கேப்டன் யாருக்கும் இல்லாத தகுதி கோலிக்கு உள்ளது என தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ரவி சாஸ்திரி கூறுகையில்,
தற்போது உள்ள இந்திய டெஸ்ட் அணி, கடந்த இரண்டு ஆண்டுகளாகத்தான் ஒன்றாக உள்ளனர். ஆனால், இதுவரை எந்த இந்திய கேப்டனும் செய்யாத விஷயத்தை இந்த , கோலி தலைமையிலான இளம் அணி சாதித்துள்ளது. இலங்கையின் காலேவில் கடந்த 20 ஆண்டுகளில் இந்திய அணி, எந்த கேப்டனின் தலைமையிலும் வென்றதில்லை. ஆனால், கோலி தலைமையில் புது சரித்திரமே படைத்துள்ளது. கடந்த 2015ல் கடந்த 22 ஆண்டில் இலங்கை மண்ணில் எந்த இந்திய கேப்டனும் சாதிக்காத சாதனையை கோலி தலைமையிலான இந்திய அணி, டெஸ்ட் தொடரை வென்று வரலாறு படைத்துள்ளதை யாரும் மறக்க முடியாது.’ என்றார்.
ரோட்டரி மாவட்டம் 3206 கோயமுத்தூர் ஐகான்ஸ் சங்கத்தின் புதிய நிர்வாகிகள் தேர்வு
ரூபாய் 210 கோடி மதிப்பில் 6,894 சோலார் பம்பிங் சிஸ்டம்களை நிறுவ, பல – மாநில ஆர்டர்களை பெற்று சிஆர்ஐ பம்ப்ஸ் சாதனை
ஜூன் 22-இல் காவேரி கூக்குரல் சார்பில் மகத்தான வருமானம் தரும் மாற்று விவசாய கருத்தரங்கம்
கோவை மாவட்டம் முழுவதும் சிறப்பு மக்கள் குறை தீர்ப்பு முகாம் – 679 மனுக்கள் பரிசீலனை, 518 க்கு உடனடி தீர்வு
கௌசிகா நதியை சீரமைக்க மார்ட்டின் அறக்கட்டளை சார்பில் ரூ. 50 லட்சம் நிதியுதவி
வெளிநாடுகளில் சென்று மருத்துவ கல்வி பயில விரும்பும் மாணவர்களுக்கு கல்வி உதவி தொகை அறிவித்த ஷாலோம் எஜுகேஷன்