• Download mobile app
04 May 2025, SundayEdition - 3371
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் ரூ.3 கோடியே 35லட்சம் மதிப்பில் பல்வேறு வளர்ச்சித் திட்டப்பணிகள் தொடக்கம்

July 29, 2017 தண்டோரா குழு

கோவையில் ரூ.3 கோடியே35லட்சம் மதிப்பில் பல்வேறு வளர்ச்சித் திட்டப்பணிகளைஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புதிட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர்எஸ்.பி.வேலுமணி வெள்ளியன்று தொடங்கி வைத்தார்.

கோவை மாநகராட்சி, 76-வது வார்டுக்குட்பட்ட தெலுங்குபாளையம் பகுதியிலுள்ள மகப்பேறு மருத்துவமனையில்ரூ .21.00 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட கூடுதல் அறைகளையும், 86-வது வார்டுக்குட்பட்ட செல்வபுரம் பகுதியிலுள்ள மாநகராட்சி மகப்பேறு மருத்துவமனையில் ரூ.52 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட கூடுதல் அறைகளையும்,76-வது வார்டு சுப்பிரமணிய உடையார் வீதியில் ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட அங்கன்வாடி கட்டிடம் உள்ளிட்ட பல திட்டங்களை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு அமைச்சர் தொடங்கி வைத்தார்.

மேலும் டெங்கு நோய் தடுப்பு நடவடிக்கையாக நிலவேம்பு குடிநீர் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.இந்நிகழ்ச்சியில் மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் டாக்டர்.க. விஜயகார்த்திகேயன் துணை ஆணையாளர் ப.காந்திமதி மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க