• Download mobile app
01 Jun 2026, MondayEdition - 3764
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

நம் மூளையிலிருந்து நமக்குத் தெரியாமல் பாஸ்வேடை திருடும் ஹேக்கர்ஸ்

July 1, 2017 தண்டோரா குழு

உலகம் முழுவதும் நவீன மயமாகி வருவதுடன் கணினி பயன்பாடும் அதிகரித்துள்ளது. கூடவே கம்ப்யூட்டர் வைரஸ் தாக்குதல்களும் அதிகரித்துள்ளது. இதற்கிடையில், ஹேக்கர்களால் நம் மூளையிலிருந்து நமக்குத் தெரியாமல் பாஸ்வேடு உள்ளிட்ட விவரங்களைத் திருட முடியும் என்ற அதிர்ச்சியூட்டும் தகவல் ஆய்வில் தெரியவந்துள்ளது.

அமெரிக்காவின் பிர்மிங்ஹாமில் உள்ள அலபாமா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆய்வாளர்கள் நடத்திய ஆய்வில் இது தெரியவந்துள்ளது. உலகில் பலரும் ரோபாடிக் விளையாட்டு பொம்மைகள் மற்றும் வீடியோ கேம்களுக்கு அடிமைகளாக இருப்பார்கள். அப்படி அவர்கள் விளையாடும் போதே எலெக்ட்ரோ என்செஃபலோகிராப் (இ.இ.ஜி.) என்ற ஹெட்செட் மூலம் அவர்களது பார்வேர்டை திருட முடியும் என ஆய்வில் கண்டு பிடித்துள்ளனர்.

மேலும், மூளையால் கட்டுப்படுத்தும் விதமாக எலெக்ட்ரோ என்செஃபலோகிராப் (இ.இ.ஜி.) ஹெட்செட் உருவக்கப்பட்டுள்ளதாம். அதன்படி, ஒருவர்வீடியோ கேம் விளையாடிக் கொண்டிருக்கும் ஹெட்செட்டை அணிந்த படியே வங்கி இணையதளத்தில் லாக்-இன் (Log in) செய்தால், சில வைரஸ் மென்பொருட்களின் உதவியுடன் அவரது மூளையில் இருந்து பாஸ்வேடு போன்ற முக்கிய தகவல்களை திருட முடியும் என ஆய்வில் தெரியவந்துள்ளது.

இது குறித்து அலபாமா பல்கலைக்கழகத்தின் உதவி பேராசிரியர் நிதிஷ் சக்சேனா கூறுகையில்,
எலெக்ட்ரோ என்செஃபலோகிராப் (இ.இ.ஜி.) ஹெட்செட்தற்போது ஆன்லைனில் எளிதில் கிடைக்கிறது. இது ஒரு நல்ல ஒரு டெக்னாலஜியாக இருந்தாலும் இதற்கு தேவையான பாதுகாப்பு விஷயங்கள் இன்னும் முழுமையாக கண்டுபிடிக்கப்படவில்லை. தற்போது உள்ள சூழலில் இது அவசியமாகிறது என்றார்.

மேலும் படிக்க