• Download mobile app
17 May 2025, SaturdayEdition - 3384
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு

நம் மூளையிலிருந்து நமக்குத் தெரியாமல் பாஸ்வேடை திருடும் ஹேக்கர்ஸ்

July 1, 2017 தண்டோரா குழு

உலகம் முழுவதும் நவீன மயமாகி வருவதுடன் கணினி பயன்பாடும் அதிகரித்துள்ளது. கூடவே கம்ப்யூட்டர் வைரஸ் தாக்குதல்களும் அதிகரித்துள்ளது. இதற்கிடையில், ஹேக்கர்களால் நம் மூளையிலிருந்து நமக்குத் தெரியாமல் பாஸ்வேடு உள்ளிட்ட விவரங்களைத் திருட முடியும் என்ற அதிர்ச்சியூட்டும் தகவல் ஆய்வில் தெரியவந்துள்ளது.

அமெரிக்காவின் பிர்மிங்ஹாமில் உள்ள அலபாமா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆய்வாளர்கள் நடத்திய ஆய்வில் இது தெரியவந்துள்ளது. உலகில் பலரும் ரோபாடிக் விளையாட்டு பொம்மைகள் மற்றும் வீடியோ கேம்களுக்கு அடிமைகளாக இருப்பார்கள். அப்படி அவர்கள் விளையாடும் போதே எலெக்ட்ரோ என்செஃபலோகிராப் (இ.இ.ஜி.) என்ற ஹெட்செட் மூலம் அவர்களது பார்வேர்டை திருட முடியும் என ஆய்வில் கண்டு பிடித்துள்ளனர்.

மேலும், மூளையால் கட்டுப்படுத்தும் விதமாக எலெக்ட்ரோ என்செஃபலோகிராப் (இ.இ.ஜி.) ஹெட்செட் உருவக்கப்பட்டுள்ளதாம். அதன்படி, ஒருவர்வீடியோ கேம் விளையாடிக் கொண்டிருக்கும் ஹெட்செட்டை அணிந்த படியே வங்கி இணையதளத்தில் லாக்-இன் (Log in) செய்தால், சில வைரஸ் மென்பொருட்களின் உதவியுடன் அவரது மூளையில் இருந்து பாஸ்வேடு போன்ற முக்கிய தகவல்களை திருட முடியும் என ஆய்வில் தெரியவந்துள்ளது.

இது குறித்து அலபாமா பல்கலைக்கழகத்தின் உதவி பேராசிரியர் நிதிஷ் சக்சேனா கூறுகையில்,
எலெக்ட்ரோ என்செஃபலோகிராப் (இ.இ.ஜி.) ஹெட்செட்தற்போது ஆன்லைனில் எளிதில் கிடைக்கிறது. இது ஒரு நல்ல ஒரு டெக்னாலஜியாக இருந்தாலும் இதற்கு தேவையான பாதுகாப்பு விஷயங்கள் இன்னும் முழுமையாக கண்டுபிடிக்கப்படவில்லை. தற்போது உள்ள சூழலில் இது அவசியமாகிறது என்றார்.

மேலும் படிக்க