• Download mobile app
16 Jul 2026, ThursdayEdition - 3809
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஓடிஷாவில் சீருடை அணியாத காவலாளிக்கு வினோத தண்டனை

June 30, 2017 தண்டோரா குழு

ஓடிஷாவில் சரியாக சீருடை அணியாத நான்கு ஊர்காவல் படை வீரர்களுக்கு முட்டிப்போடும் தண்டனை விதிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஓடிஸா மாநிலத்தின் பரிபாடா என்னும் இடத்தில் ரத யாத்திரை நடைபெற்றது. அந்த யாத்திரை நிகழ்ச்சியை ஒழுங்குப்படுத்த ஊர்காவல் படை பிரிவினர் நியமிக்கப்படிருந்தனர். அப்போது நான்கு வீரர்கள் சரியான சீருடை அணியவில்லை என்று ரிசர்வ் இன்ஸ்பெக்டர் அசோக் குமார் சேதி கவனித்துள்ளார்.

கோபம் அடைந்த அவர் சீருடை அணியாத நான்கு பேருக்கும் முட்டிப்போடும் தண்டனையை அளித்துள்ளார். அந்த நான்கு பேரில் ஒருவர் பெண். அவர்கள் ஒரு நாளைக்கு எட்டு மணி நேரம் பணிசெய்கிறார்கள். அவர்களுக்கு 22௦ ரூபாய் வழங்கப்படுகிறது. இந்த சம்பவம் அந்த மாநிலத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து அசோக் சேதி கூறுகையில்,

“ரத யாத்திரை நடைபெற்ற நாளில் காக்கி பேண்ட்டும் சாதாரண சட்டையை அணிந்திருந்தனர். சரியான சீருடை அணியாததால், அவர்களை தண்டிக்கும்படி, நான்கு பேரையும் மூன்று நிமிடம் முட்டிப்போடும்படி உத்தரவிட்டேன்” என்று கூறினார்.

இச்சம்பவம் குறித்து, Director General of Police (Home Guards), பினாய் பீஹாரா விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார். விசாரணை முடிந்த பிறகு, சரியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க