• Download mobile app
03 Jun 2026, WednesdayEdition - 3766
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஓட்டுப் பெட்டியை தலையில் சுமக்கும் அவலம்

May 15, 2016 வெங்கி சதீஷ்

சுதந்திர இந்தியாவில் இது வரை பல கட்சிகள் ஆட்சி செய்திருந்தாலும் இன்னமும் ஒருசில இடங்களில் அடிப்படை வசதிகள் செய்து கொடுக்காத அரசைத்தான் நாம் பார்த்து வருகிறோம். குறிப்பாக மலைக் கிராமங்களில் அடிப்படை வசதிகள் கூட செய்து கொடுக்க முடியாத நிலையில் தான் அரசு உள்ளது.

அதே சமயம் இன்னமும் பல மலைக் கிராமங்களில் அடிப்படை வசதிக்காக சாலை மறியல் உள்ளிட்ட பல போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. அதோடு, ஒவ்வொரு தேர்தலின் போதும் கருப்புக்கொடி ஏற்றுவது, தேர்தல் புறக்கணிப்பு என கோசங்கள் எழுப்புவது என்ற போராட்டம் நடைபெற்றுக்கொண்டுதான் உள்ளது. இந்நிலையில் வாக்குப்பதிவிர்காக கொடுக்கப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரம் மற்றும் மைய இயந்திரம் ஆகியவற்றை நாமக்கல் மாவட்டம் போதைமலை பகுதிக்கு சென்ற தேர்தல் பணியாளர்கள் தலையில் வைத்துத் தூக்கிச் சென்ற காட்சியை பார்க்கமுடிந்தது.

அதோடு தேனி மாவட்டம் போடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கொட்டக்குடி, குரங்கணி, கொழுக்குமலை, ஊத்துக்காடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு வாக்குப் பெட்டிகளை குதிரை மீது வைத்து சென்றுள்ளனர். இது இன்னமும் அங்குள்ள மக்களுக்கு அடிப்படை வசதியை செய்து தரவில்லை என்பதையே காட்டுகிறது. இது குறித்து அப்பகுதியில் வசித்து வரும் கல்லூரி மாணவர் சிவக்குமார் கூறும்போது, நான் பிறந்தபோது குதிரை மீது வைத்து தூக்கிச்சென்றனர். அதன் பிறகு பல உள்ளாட்சி மற்றும் சட்டமன்ற தேர்தல்களை மக்கள் சந்தித்துள்ளனர் ஆனால் எங்களுக்கு இன்னும் தீர்வு மட்டும் கிடைக்கவில்லை.

இங்குள்ள மக்கள் பலர் பெண்களை மேற்படிப்பிற்கு அனுப்ப மறுத்து வருகின்றனர். இதற்கு காரணம் இந்த வழித்தடம் இல்லாததே ஆகும். இனி அடுத்த தேர்தலிலாவது வாக்குப்பெட்டிகள் சாலை வழியாக வருமா என எதிர்பார்த்து காத்திருக்க வேண்டியது தான் என தெரிவித்தார்.

மேலும் படிக்க