• Download mobile app
12 Jun 2026, FridayEdition - 3775
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கல்வி கட்டணத்தை குறைக்க வலியுறுத்தி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் நூதன ஆர்ப்பாட்டம்

May 23, 2017 தண்டோரா குழு

கோவையில் அனைத்து தனியார் பள்ளிகளிலும் 50 சதவீத கல்வி கட்டணத்தை குறைத்தல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் நோட்டு மாலை அணிந்து நுதன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

தமிழகம் முழுவதும் ஏற்பட்டுள்ள கடும் வறட்சியால் கோவையிலும் தொழில் நெருக்கடி நிலவி வருகிறது. இந்த சூழலில் தனியார் பள்ளிகள் அதிக கல்வி கட்டணங்களை வசூலிப்பதால் பெற்றோர்கள் அவதிக்குள்ளவதாககுற்றம்சாட்டிகோவை தெற்கு வட்டாச்சியர் அலுவலகம் முன்பாக இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் பல்வேறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.அப்போது தனியார் பள்ளிகளில் நடைபெறும் கல்வி கொள்ளையை சித்தரிக்கும் வகையில் நோட்டு மாலை அணிந்து நூதன முறையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

மேலும், தனியார் பள்ளி கல்வி கட்டணத்தை 50 சதவீதமாக குறைக்க வேண்டுமெனவும், தனியார் பள்ளிகளில் நன்கொடை வசூலிப்பதை தடுக்க வேண்டுமெனவும், கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் படி 25 சதவீத இடஒதுக்கீட்டை முறையாக அமல்படுத்த வேண்டுமெனவும், தலித் மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கு அரசாணை 92 ஐ அமல்படுத்த வேண்டுமெனவும்
வலியுறுத்திஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோஷங்களை எழுப்பினர்.

மேலும் படிக்க