• Download mobile app
05 Sep 2026, SaturdayEdition - 3860
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பிரபல சர்ச்சைக்குரிய சாமியார் சந்திராசாமி மரணம்

May 23, 2017 தண்டோரா குழு

ராஜீவ் கொலையில் ஜெயின் கமிஷன் விசாரிக்க வேண்டும் என குறிப்பிடப்பட்ட சாமியார் சந்திராசாமி உடல்நலக்குறைவாவால் டெல்லியில் காலமானார்.

இந்திய பிரதமரான ராஜீவ்காந்தி, கடந்த 1991-ஆம் ஆண்டு ஸ்ரீபெரும்புதூரில் மனித வெடிகுண்டு தாக்குதல் மூலம் படுகொலை செய்யப்பட்டார். இந்த படுகொலை வழக்கில் விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த முருகன்,நளினி, சாந்தன்,பேரறிவாளன் உட்பட எட்டு பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.

எனினும், விடுதலைப் புலிகள் இயக்கத்தினரால் ராஜீவ்காந்தி படுகொலை செய்யப்பட உள்ளது, இந்திய அரசியல்வாதிகளிடையே செல்வாக்கு பெற்ற சந்திராசாமி என்ற சாமியாருக்கு முன்னரே தெரியும் என சர்ச்சை எழுந்தது. இதையடுத்து, ராஜீவ்காந்தி படுகொலை வழக்கை விசாரித்த ஜெயின் கமிஷன், சந்திராசாமியையும் இந்த வழக்கில் விசாரிக்க உத்தரவிட்டிருந்தது.

இதற்கிடையில், கடந்த சில ஆண்டுகளாக வெளி உலக தொடர்புகள் ஏதுமின்றி வாழ்ந்து வந்த சந்திராசாமி, உடல்நலக்குறைவால் இன்று டெல்லியில் உயிரிழந்தார்.அவருக்கு வயது 66. இவர் இந்தியாவின் முன்னாள் பிரதமர் நரசிம்மராவிற்கு நெருக்கமாக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க