• Download mobile app
01 Dec 2025, MondayEdition - 3582
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

அமைச்சர் காமராஜ் மீது இன்னும் ஏன் வழக்குப் பதிவு செய்ய வில்லை – உச்ச நீதிமன்றம்

May 3, 2017 தண்டோரா குழு

ரூ 3௦ லட்சம் மோசடி புகாரில் சிக்கிய தமிழக உணவுத் துறை அமைச்சர் காமராஜ் மீது இன்னும் ஏன் வழக்குப் பதிவு செய்யவில்லை என தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

ரியல் எஸ்டேட் உரிமையாளர் குமார் என்பவர் தொடர்ந்த வழக்கில் தமிழக உணவுத்துறை அமைச்சர் காமராஜ் மீது வழக்குப் பதிவு செய்ய உச்ச நீதிமன்றம் ஏற்கனவே உத்தரவிட்டிருந்தது. அவரிடம் ரூ 30 லட்சம் வரை மோசடி செய்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது .அப்போது “நீதிமன்ற உத்தரவிட்ட பிறகும் அமைச்சர் காமராஜ் மீது ஏன் இன்னும் வழக்குப்பதிவு செய்யவில்லை? புகார் தெரிவித்த பினனர் அமைச்சர் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்னென்ன? அமைச்சர் என்றால் சட்ட விதிகளுக்கு மேலானவரா” என உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.

மேலும் இந்த வழக்கு தொடர்பான ஆவணங்களை வரும் 8 -ம் தேதி தாக்கல் செய்யவும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

மேலும் படிக்க