• Download mobile app
27 Jan 2026, TuesdayEdition - 3639
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

மருத்துவக் கல்லூரிகளில் 50% இடங்களை அரசுக்கே ஒதுக்க வேண்டும் – சென்னை உயர் நீதிமன்றம்

May 2, 2017 தண்டோரா குழு

தனியார் மருத்துவக் கல்லூரிகளில் 50% இடங்களை அரசுக்கே ஒதுக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தனியார் கல்லூரிகள், நிகர்நிலை பல்கலைக்கழகங்களின் மருத்துவப் பட்ட மேற்படிப்பில் மாணவர் சேர்க்கை குறித்து மருத்துவர்கள் வித்யா ஷரோண் மற்றும் காமராஜ் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

இவ்வழக்கை இன்று விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், தனியார் மருத்துவக் கல்லூரிகள் மற்றும் நிகர்நிலை பல்கலைக்கழகங்கள் அனைத்தும் தங்கள் மாணவர் சேர்க்கையில் 50% இடங்களை அரசுக்கே ஒதுக்க வேண்டும் என்றும் இந்த 50 % இடஒதுக்கீடை கலந்தாய்வு மூலமே நிரப்ப வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது. அதேசமயம் சிறுபான்மை கல்லூரிகளுக்கு இந்த உத்தரவு பொருந்தாது என்றும் தனியார் மருத்துவக்கல்லூரிகளில் உள்ள சேர்க்கை இடங்களை இணையதளத்தில் வெளியிட்டு வெளிப்படை தன்மையை ஏற்படுத்த வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும், தனியார் மருத்துவக் கல்லூரிகளிடம் இருந்து ஒதுக்கீட்டு இடங்களை கேட்டு பெறவில்லை என்று தமிழக அரசுக்கும் விதி மீறிய தனியார் கல்லூரிகள் மீது நடவடிக்கை எடுக்காத எம்.சி.ஐ.க்கும் நீதிமன்றம் தலா 1 கோடி ருபாய் அபராதம் விதித்துள்ளதாக நீதிபதி கூறியுள்ளார்.

மேலும் படிக்க