• Download mobile app
13 Mar 2026, FridayEdition - 3684
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

காதுகளை பயன்படுத்தி சாதிக்கும் கண் தெரியாத நீச்சல் வீராங்கனை

April 24, 2017 tamilsamayam.com

டோக்கியோவில் வரும் 2020ல் நடக்கவுள்ள பாராலிம்பிக் நீச்சலில் தங்கப்பதக்கம் கைப்பற்றுவேன் என கண்பார்வையற்ற நீச்சல் வீராங்கனை காஞ்சனமாலா தெரிவித்துள்ளார்.

கர்நாடகாவின் பெங்களூருவைச் சேர்ந்த அமராவதி பகுதியில் பிறந்தவர் காஞ்சனமாலா பாண்டே. கண்பார்வை தெரியாத இவர், தனது 10 வயது முதலில் நீச்சல் போட்டிகளில் பங்கேற்று வருகிறார். இதுவரை சர்வதேச அளவில் உட்பட இவர் 110 பதக்கங்களை நீச்சல் போட்டிகளில் பங்கேற்று குவித்துள்ளார்.

அதில் கடந்த 2006ல் ஆஸ்திரேலியாவின் மெல்போர்னில் நடந்த காமன்வெல்த் போட்டிகளில் 6 பதக்கம், ஆசிய போட்டிகளில் 9 பதக்கம், 50 மாநில அளவிலான பதக்கங்களும் அடங்கும். இவர் தற்போது 2020ல் ஜப்பானின் டோக்கியோவில் நடக்கவுள்ள பாராலிம்பிக் போட்டிகளில் தங்கப்பதக்கம் வெல்ல திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து காஞ்சனமாலா கூறுகையில்,

“மற்ற நீச்சல் வீரர்கள் தண்ணீருக்கு அடியில் செல்லும் போது தெளிவாக பார்க்க, கூகிள் கண்ணாடிக்களை பயன்படுத்துவார்கள். ஆனால் எனக்கு பிறவியில் இருந்தே கண் பார்வை கிடையாது. தண்ணீருக்குள் சென்ற பின் என்னால் பார்க்க முடியாது என்பதால், அருகில் நீந்தும் சக போட்டியாளர்களின் நீச்சல் சத்தத்தை பின் தொடர்ந்து முந்துவேன். இதே உக்தியை பயன்படுத்தி பாராலிம்பிக், மற்றும் ஆசிய போட்டிகளிலும் சாதிப்பேன்,” என்றார்.

மேலும் படிக்க