• Download mobile app
13 Mar 2026, FridayEdition - 3684
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

உலக சாதனையை ‘சால்ட் பே’ ஸ்டைலில் கொண்டாடிய கெயில்!

April 20, 2017 tamilsamayam.com

குஜராத் அணிக்கு எதிரான ஐபிஎல் தொடரின் லீக் போட்டியில், உலக சாதனை படைத்த பெங்களூரு வீரர் கிறிஸ் கெயில் பிரபலமான சால்ட் பே ஸ்டைலில் கொண்டாடினார்.

இந்தியாவில் நடக்கும் உள்ளூர் டி-20 கிரிக்கெட் தொடரான ஐபிஎல் தொடர், 10வது ஆண்டாக வெற்றிகரமாக துவங்கி நடந்து வருகிறது. இதில் ராஜ்கோட்டில் நடந்த 20வது லீக் போட்டியில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, குஜராத் அணிகள் மோதின.

இதில் பெங்களூரு அணிக்கு, துவக்க வீரராக களமிறங்கிய கிறிஸ் கெயில், 3 ரன்கள் எட்டிய போது, ஒட்டு மொத்த டி-20 அரங்கில் 10,000 ரன்கள் என்ற புதிய மைல்கல்லை எட்டினார். இம்மைல்கல்லை தொட்ட முதல் வீரர் என்ற உலகசாதனை படைத்த கெயில் இந்த போட்டியில் 77 ரன்கள் விளாசினார்.

‘அவுட் ஆப் பார்மில்’ இருந்த கெயில், இழந்த பார்ம் மீண்டும் கிடைத்த மகிழ்ச்சியில் மைதானத்தில் மண்டியிட்டு எதோ வித்தியாசமான செய்கை செய்ததை காணமுடிந்தது. அவர் என்ன விதமான ஸ்டைலில் தனது மகிழ்ச்சியை கொண்டாடினார் என்ற விஷயம் தற்போது தெரியவந்துள்ளது.

மேலும் படிக்க