• Download mobile app
27 Apr 2024, SaturdayEdition - 2999
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

சிங்கப்பூர் ஓபன் : காலிறுதியில் சிந்து தோல்வி!

April 15, 2017 tamilsamayam.com

சிங்கப்பூர் ஓபன் பாட்மிண்டன் தொடரின் காலிறுதியில் இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை பி.வி. சிந்து தோல்வியடைந்து வெளியேறினார்.

சிங்கப்பூரில் ஆண்டு தோறும் பாட்மிண்டன் தொடர் நடப்பது வழக்கம். இந்த ஆண்டுக்கான தொடர் தற்போது நடக்கிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதியில் உலகின் ஐந்தாம் நிலை வீராங்கனையான இந்தியாவின் பி .வி.சிந்து, ஸ்பெயினின் கரோலினா மரினை எதிர்கொண்டார்.

இதில் துவக்கம் முதல் சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்திய சிந்து முதல் செட்டை 11-21 என இழந்தார். தொடர்ந்து நடந்த இரண்டாவது செட்டிலும் எழுச்சி பெற தவறிய சிந்து, அந்த செட்டையும் 14-21 என கோட்டைவிட்டார்.

முடிவில், இந்தியாவின் பி .வி.சிந்து, ஸ்பெயினின் கரோலினா மரினிடம் 11-21, 14-21 என்ற செட்களில் தோல்வியடைந்து தொடரில் இருந்து வெளியேறினார்.

சாய் பிரனீத் அசத்தல்:

இதே போல ஆண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதியில், தாய்லாந்து வீரர் தாங்கோசாக்கை எதிர்கொண்ட இந்தியாவின் சாய் பிரனீத் 21-15, 14-21, 19-21 என்ற செட்களில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு தகுதி பெற்றார்.

மேலும் படிக்க