• Download mobile app
05 Jun 2026, FridayEdition - 3768
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஒ.பி.எஸ் மகன் மற்றும் தம்பியை கைது செய்ய 13-ம் தேதி வரை தடை

April 11, 2017 தண்டோரா குழு

சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் பிரச்சாரத்தின் போது ஏற்பட்ட மோதல் வழக்கு தொடர்பாக ஓ.பன்னீர்செல்வம் மகன் மற்றும் தம்பி ஆகியோரைக் கைது செய்ய, ஏப்ரல் 13-ம் தேதி வரை தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஆர்.கே.நகர் தொகுதியில் அதிமுக புரட்சித்தலைவி அம்மா(ஓ.பன்னீர்செல்வம் அணி) கட்சி வேட்பாளர் மதுசூதனனை ஆதரித்து தண்டையார்பேட்டை நேதாஜி நகர் பகுதியில் கடந்த 6-ம் தேதி ஓ.பன்னீர்செல்வம் பிரச்சாரம் செய்தார். அப்போது அ.தி.மு.க. அம்மா (சசிகலா அணி) டி.டி.வி தினகரன் தரப்பினருக்கும், ஓ.பி.எஸ் தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

இச்சம்பவம் குறித்து ஓ.பன்னீர்செல்வம் மகன் ரவீந்திரநாத் குமார், தம்பி ஓ.ராஜா உள்ளிட்டவர்கள் மீது ஆர்.கே.நகர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கில் தங்களுக்கு முன்ஜாமீன் வழங்கக் கோரி ரவீந்திரநாத் குமார், ஓ.ராஜா ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.

இந்த மனு மீதான விசாரணை செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதி ஓ.பன்னீர்செல்வம் மகன் ரவீந்திரநாத் குமார் மற்றும் தம்பி ஓ.ராஜா ஆகியோரைக் கைது செய்ய ஏப்ரல் 13-ம் தேதி வரை தடை விதித்து உத்தரவிட்டார்.

மேலும் படிக்க