• Download mobile app
17 Jan 2026, SaturdayEdition - 3629
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

முகத்தை ஸ்கேன் செய்தால் தான் கழிவறைக்கு செல்ல முடியும்

April 8, 2017 தண்டோரா குழு

சீனா பெய்ஜிங் நகருக்கு வரும் சுற்றுலா பயணிகள், பொது கழிப்பிடங்களிலிருந்து டிஸ்யூ காகிதங்கள் எடுத்து செல்வதை தடுக்க சீன அரசு முகத்தை ஸ்கேன் செய்யும் புதிய தொழில்நுட்ப முறையை அமலுக்கு கொண்டு வந்துள்ளது.

சீன அரசு தனது நாட்டிற்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கான அடிப்படை வசதிகளை சுற்றுலா தளங்களில் மேம்படுத்தி வருகிறது. அந்த வகையில் கழிப்பிடங்களை பயன்படுத்துவோர், அதிலுள்ள டிஸ்யூ காகிதங்களை எடுத்து செல்வதாக புகார் எழுந்துள்ளது. இதையடுத்து அதை தடுக்க கழிப்பிடங்களை எத்தனை பேர் பயன் படுத்துகின்றனர் என்று அறிந்துக்கொள்ள, முகத்தை ஸ்கேன் செய்யும் கேமராவை பொருத்தியுள்ளனர்.

“அங்கு வருபவர்கள் கேமரா முன் கட்டாயமாக நிற்கவேண்டும். அவர்களுடைய முகம் ஸ்கேன் செய்த பிறகு, 2 அடி நீள காகிதம் தரப்படும். அதைதான் அவர்கள் பயன்படுத்த வேண்டும். மேலும் வேண்டும் என்றால், மறுபடியும் முகம் ஸ்கேன் செய்து பெற்றுக்கொள்ள வேண்டும். இந்த புதிய தொழில்நுட்ப முறையை மேம்படுத்த சுமார் 23 ஆயிரம் கோடி ரூபாயை சீன அரசு செலவு செய்துள்ளது,” என்றார் சுற்றுலா அதிகாரி ஒருவர்.

சீனா சுற்றுலா துரையின் ஆராய்ச்சியாளர் ஜான் டான்க்மெய் கூறுகையில்,

“மக்கள் சுற்றுலா பற்றி அதிக ஆர்வத்துடன் இருக்கின்றனர்.
சுற்றுலா செல்லும்போது, டிஸ்யூ காகிதங்கள் பயன்படுத்த வேண்டிய நேரத்தில் இல்லாமல் போய்விட்டால் என்ன செய்வது என்று மக்கள் கவலைபடுகின்றனர். இதனால் அவர்களுக்கு கிடைக்கும் டிஸ்யூ காகிதங்களை எடுத்துச்சென்று விடுகின்றனர்.

இந்த முயற்சி தற்போது 90 சதவீதம் தன் வெற்றிபெற்றுள்ளது. இன்னும் 10 சதவீதம் பெற்றிபெருவது அவசியமாக இருக்கிறது என்றார்.

மேலும் படிக்க