• Download mobile app
03 Sep 2025, WednesdayEdition - 3493
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

உலகின் முதல் கப்பல் சுரங்கம்

April 8, 2017 தண்டோரா குழு

நார்வே நாட்டில் நாள் ஒன்றுக்கு 7௦ முதல் 12௦ கப்பல்கள் வந்து செல்லக்கூடிய முதல் கப்பல் சுரங்கத்தை உருவாக்கவுள்ளனர்.

இந்த சுரங்கப் பாதை 118 அடி அகலம் மற்றும் 162 அடி உயரம், 5,610 அடி ஆழத்தில் உருவாக்கப்படும்.இந்த கப்பல் சுரங்கம் வழியாக, 20,000 டன் எடையுள்ள கப்பல்கள் வரை செல்ல முடியும். இதை கட்ட 417 மில்லியன் டாலர் செலவாகும் என்று மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. இந்த சுரங்கப்பாதை வரும் 2௦23ம் ஆண்டு திறக்கப்படும் என்று அறிவித்துள்ளது.

இந்த சுரங்க பாதை கட்டுவதற்கான திட்டம் பல ஆண்டுகளுக்கு முன்பே இருந்தது. நிதி பிரச்னையில் அதை செயல்படுத்த முடியவில்லை. ஆனால், தற்போது தேவையான நிதி இருப்பதால், அதை செயல்படுத்த முடியும்” என்று நார்வேயின் போக்குவரத்து அமைச்சர் கேடில் சொல்விக் ஒல்சென் கூறினார்.

திட்ட மேலாளர் டெர்ஜே அன்டர்சன் கூறுகையில்,

இந்த சுரங்கப்பாதையை கட்ட 8 மில்லியன் டன் எடையுள்ள கற்பாறைகள் தேவைப்படுகிறது.மேலும் 7௦ மீட்டருக்கு குறைவாக இருக்கும் கப்பல்கள் இலவசமாக பயணிக்கலாம். ஆனால் 7௦ மீட்டருக்கு மேல் உள்ள கப்பல்களிடமிருந்து கட்டணம் வசூலிக்கப்படும் என்றார்.

மேலும் படிக்க