• Download mobile app
19 May 2024, SundayEdition - 3021
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

இரட்டை இலை சின்னத்தை நீக்க உத்தரவு

April 7, 2017 தண்டோரா குழு

இரட்டை இலை சின்னத்தை இணையதளத்தில் இருந்து நீக்க வேண்டும் என இரு அதிமுக அணியினருக்கும் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல், 12-ம் தேதி நடக்க உள்ளது. இதில், அ.தி.மு.க-வின் சசிகலா அணி, பன்னீர்செல்வம் அணி ஆகிய இரு அணிகளும் போட்டியிடுகின்றன. இரட்டை இலைச்சின்னத்தைத் தேர்தல் ஆணையம் முடக்கியது. இதனால் அச்சு ஊடகங்கள் மற்றும் இணையதளங்களில் இரட்டை இலை சின்னத்தை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டது.

இதனிடையே அ.தி.மு.க. அம்மா கட்சி இணையதளத்தில் இரட்டை இலை சின்னம் தொடர்ந்து பயன்படுத்தப்பட்டு வருவதாக தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டது.இந்நிலையில், இரட்டை இலை சின்னத்தை தவறாக பயன்படுத்தியது குறித்து விளக்கம் அளிக்க மதுசூதனன் மற்றும் டி.டி.வி.தினகரனுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

மேலும், இரட்டை இலை சின்னத்தை இணையதளத்தில் இருந்து நீக்க வேண்டும் என இரு அதிமுக அணியினருக்கும் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக நாளை மாலை 4 மணிக்குள் நீக்கியதற்கான ஆதாரத்தை சமர்ப்பிக்கவும் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

மேலும் படிக்க