• Download mobile app
19 May 2024, SundayEdition - 3021
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

லஞ்சம் ஊழலில் இந்தியாவிற்கு 9வது இடம்

April 7, 2017 தண்டோரா குழு

லஞ்சம் மற்றும் ஊழல் நடைமுறைகள் குறித்து 41 நாடுகளில் எடுக்கப்பட்ட ஆய்வில் இந்தியா 9வது இடத்தில் இருப்பது தெரியவந்துள்ளது.

ஐரோப்பா, மத்திய கிழக்கு, ஆப்பிரிக்க நாடுகள், இந்தியா ஆகிய நாடுகளில் நடத்தபட்ட ஆய்வில் லஞ்சம் ஊழல்கள் அதிகமாக காணப்படும் உக்ரைன்,சைப்ரஸ், கிரீஸ், ஸ்லோவேனியா, குரோஷியா, கென்யா, தெற்கு ஆப்ரிக்கா, மற்றும் ஹங்கேரி ஆகிய நாடுகளுக்கு அடுத்தபடியாக இந்தியா 9 வது இடத்தில் உள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

வர்த்தக சூழ்நிலைகளில் காணப்படும் நிலையற்ற தன்மை, நிதி இலக்குகளை அடைவதற்காக கொடுக்கப்படும் நிர்பந்தம், தொழில் முன்னேற்றத்தின் மீதான அதீத ஆர்வம் காரணமாக ஊழியர்கள் முறைகேடுகளில் ஈடுவதாகவும் ஆய்வில் தெரியவந்துள்ளது. அதைபோல் தங்களுடைய சொந்த வாழ்கையை உயர்த்திக்கொள்ள தர்மத்திற்கு மாறாக செயல்பட தயாராக இருப்பதாக 41 சதவீத இந்திய மக்கள் பதிலளித்துள்ளார்கள்.

இந்த ஆய்வின் போது இந்தியாவில் கேள்வி கேட்கப்பட்டவர்களில் 78% பேர் இந்தியாவில் வர்த்தகத்தில் பெரிய அளவில் ஊழல் நடப்பதாக தெரிவித்துள்ளனர். பணிகளையோ அல்லது சம்பளத்தையோ மேம்படுத்த தவறான தகவல்களை தர 13 சதவீத மக்கள் பதிலளித்துள்ளனர்.லஞ்சம் மற்றும் ஊழல் குறித்த அறிக்கையை வெளியிட நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை தடுத்து விடுகின்றனர் என்று 58 சதவீதம் பேர் தெரிவித்துள்ளனர்.

“வெளிப்படைத்தன்மை மற்றும் ஆட்சி ஒழுங்குமுறை காரணமாக 2016ம் ஆண்டு எடுக்கப்பட்ட ஆய்வில் 6வது இடத்தில் இருந்த இந்தியா தற்போது 9 வது இடத்திற்கு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க