• Download mobile app
10 May 2024, FridayEdition - 3012
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

திவிக பாரூக் குடும்பத்திற்கு 1 லட்சம் வழங்கிய சத்யராஜ்

April 2, 2017 தண்டோரா குழு

கோவையில் கொலை செய்யப்பட்ட திராவிட விடுதலை கழகத்தை சேர்ந்த பாரூக் குடும்பத்திற்கு நடிகர் சத்யராஜ் 1 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கியுள்ளார்.

கோவை உக்கடம் ஹவுசிங் யூனிட் பகுதியை சேர்ந்தவர் பாரூக்(31). திராவிட விடுதலை கழகத்தை சேர்ந்தவரான இவர், கடந்த மாதம் 16ம் தேதி இரவு மர்ம நபர்களால் வெட்டிக் கொடூர முறையில் கொல்லப்பட்டார்.

இவ்வழக்கில், அன்சாத், சதாம் உசேன் உள்ளிட்ட 6 பேர், தாங்கள்தான் கொலை செய்ததாக நீதிமன்றத்தில் சரணடைந்தனர். மேலும் பாரூக் இஸ்லாமிய மதத்திற்கு எதிரான கருத்துக்களை தொடர்ந்து பரப்பி வந்ததாகவும், அதனால் ஆத்திரமுற்று அவரை கொலை செய்ததாகவும், கொலையாளிகள் வாக்குமூலம் அளித்திருந்தனர்.

இந்நிலையில், கொல்லப்பட்ட பாரூக் குடும்பத்திற்கு, பெரியாரின் தொண்டராக அறியப்படும் நடிகர் சத்யராஜ் ஒரு லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கியுள்ளார்.

மேலும் படிக்க