• Download mobile app
05 Jun 2026, FridayEdition - 3768
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

எச்.ராஜாவை மீது இளைஞர் காங்கிரஸினர் கோவை மாநகர ஆணையரிடம் புகார்

March 31, 2017 தண்டோரா குழு

சோனியா காந்தியை இழிவுபடுத்தி பேசிய எச்.ராஜா மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கோவை மாவட்ட இளைஞர் காங்கிரஸினர் கோவை மாநகர ஆணையரிடம் புகார் அளித்துள்ளனர்.

இது தொடர்பாககோவை மாநகர ஆணையர் அமல்ராஜிடம் அவர்கள் அளித்த புகாரில், பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா நேற்று மாலை தொலைகாட்சி ஒன்றிற்கு பேட்டி கொடுக்கும் போது காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா காந்தியை பற்றி மிகவும் இழிவான முறையில் நிறவெறியை தூண்டும் வகையில் பேசியுள்ளார்.

இதுமட்டுமின்றி சமீப காலமாக அவர் மத ரீதியாகவும், இன ரீதியாகவும் தொடர்ந்து கருத்துக்களை பேசி வருகிறார்.

இவரது கருத்துக்கள் இந்திய ஜனநாயகத்தின் இறையாண்மையை கெடுக்கும் வண்ணம் உள்ளது. இதுமட்டுமின்றி இவரது பேச்சு மற்றும் கருத்துக்கள் இந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரக அமைவதால் அவர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியுள்ளனர்.

மேலும் படிக்க