• Download mobile app
01 Mar 2026, SundayEdition - 3672
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

8 மருத்துவர்களுக்கு டாக்டர் பி.சி. ராய் விருது வழக்கப்பட்டது

March 29, 2017 தண்டோரா குழு

புதுதில்லியிலுள்ள எய்ம்ஸ் மருத்துவமனை இயக்குனர் ரந்தீப் குலேரியா மற்றும் ஸ்ரீ கங்கா ராம் மருத்துவமனையின் 2 மருத்துவர்கள் உள்ளிட்ட 8 எய்ம்ஸ் மருத்துவமனை மருத்துவர்களுக்கு பிரத்தியக டாக்டர் பி.சி.ராய் விருதை இந்திய குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி செவ்வாய்க்கிழமை வழங்கினார்.

எய்ம்ஸ் மருத்துவமனையின் எலும்பியல் துறை தலைவர் ராஜ் மல்ஹோத்ரா சிறந்த மருத்துவ ஆசிரியர் பிரிவின் கீழ் இந்த விருதை பெற்றார்.

“எய்ம்ஸ் மருத்துவமனையை சார்ந்த, மகப்பேறு(Obstetrics) மற்றும் பெண்களுக்கு வரும் நோய் பற்றி ஆயும் மருத்துவ அறிவியல்(Gynaecology) பேராசிரியர் டாக்டர் ஜே.பி. ஷர்மா, எலும்பியல்(Orthopaedic) துறை பேராசிரியர் டாக்டர் சி.சி. யாதவ், சிறுநீரக(Urology) துறை தலைவர் டாக்டர் பி.என். டோக்ரா மற்றும் அதே துறையின் பேராசிரியர் டாக்டர் அம்லேஸ் சேத், இருதய(Cardiology) துரையின் பேராசிரியர் டாக்டர் ராகேஷ் யாதவ், அணு மருத்துவ(Nuclear Medicine) துரையின் பேராசிரியர் டாக்டர் ராகேஷ் குமார், ஆகியோர் விருது பெற்றவர்கள் பட்டியலில் அடங்குவர்” என்று எய்ம்ஸ் மருத்துவமனை அதிகாரி தெரிவித்தார்.

மேலும், ஸ்ரீ கங்கா ராம் மருத்துவமனையின் மேலாண்மை குழு தலைவர் மற்றும் சிறுநீரகவியல்(Nephrology) நிபுணர் டாக்டர் டி,எஸ்.சனா மற்றும் மார்பு(Chest and Thoracic Surgery) அறுவை சிகிச்சை துறை தலைவர் டாக்டர் அரவிந்த் குமார் ஆகியோர் இந்த விருதை பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க