• Download mobile app
03 May 2024, FridayEdition - 3005
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

இறால் முருங்கைக்காய் கிரேவி

October 17, 2018 samayalkurippu.com

தேவையான பொருட்கள் :

முருங்கைக்காய் – 1
இறால் – ¼ கிலோ
நறுக்கிய வெங்காயம் – 2
நறுக்கிய தக்காளி – 2
பொடித்த மிளகு, சீரகம் – 2 ஸ்பூன்
மிளகாய்த் தூள் – 2 ஸ்பூன்
கரம் மசாலா – ½ ஸ்பூன்
மஞ்சள் தூள் – ¼ ஸ்பூன்
எண்ணெய் – 2 ஸ்பூன்
அரைத்த தேங்காய் விழுது – 2 ஸ்பூன்
கருவேப்பிலை – சிறிதளவு
கடுகு – ½ ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு

செய்முறை:

இறாலை நன்றாக சுத்தம் செய்து கொள்ளவும்.ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும்,கடுகு,கருவேப்பிலை போட்டு தாளித்த பின்,பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்.

வெங்காயம் கொஞ்சம் வதங்கியவுடன் உப்பு,மஞ்சள் தூள்,மிளகாய்த் தூள்,பொடித்த மிளகு,சீரகம் சேர்த்து வதக்கவும்.பின்,அதில் நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்கவும்.தக்காளி நன்கு வதக்கியவுடன்,முருங்கைக்காய், இறால் சேர்த்து கிளறி விடவும்.

5 நிமிடம் கழித்து கரம் மசாலா சேர்த்து,தேவையான அளவு தண்ணீர்,அரைத்த தேங்காய் விழுது சேர்த்து கடாயை மூடி,15 நிமிடம் அடுப்பில் சிம்மில் வைத்து வேக விடவும்.எண்ணெய் மேலே மிதந்து வந்தவுடன் இறக்கவும்.சுவையான இறால் முருங்கைகாய் கிரேவி தயார்!!

மேலும் படிக்க