• Download mobile app
01 Mar 2026, SundayEdition - 3672
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஆளில்லா விமானங்களை கண்டுபிடிக்க புதிய கருவி

March 23, 2017 தண்டோரா குழு

அமெரிக்காவில் உள்ள ‘ஏர்ஸ்பேஸ் சிஸ்டம்’ என்னும் நிறுவனம் ஆளில்லா விமானங்களை கண்டு பிடிப்பதற்கான கருவியை அறிமுகப்படுத்தியுள்ளது.

வெளிநாடுகளில் ஆளில்லா விமானங்கள் அதிக அளவில் பயன்பாட்டிலுள்ளது. இவைகளை பறக்க விடுவது மிக சகஜமாக இருக்கும். ஆனால், இவைகளை கொண்டு ராணுவ விடுதிகள், ராணுவ தளங்கள், சிறைச்சாலைகள், பொது இடங்களில் வேவு பார்க்கவும் உதவுகிறது. இதை பயன்படுத்தி வெடி குண்டுகளை போடும் வாய்ப்புகளும் உள்ளது.

இது போன்ற ஆபத்தான நேரங்களில், ஆளில்லா விமானங்களை கட்டுக்குள் வைத்திருப்பது அவசியமாக இருக்கிறது. இதற்கான பல வழிகளை அமெரிக்க ராணுவத்தினர் மேற்கொண்டு வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக ‘ஏர்ஸ்பேஸ் சிஸ்டம்’ ஒரு கருவியை உருவாக்கியுள்ளது. இது எதிரியின் ஆளில்லா விமானம் வருவதை அறிந்தவுடன் தளத்திலிருந்து கிளம்பி, மரங்களில் மோதாமல் எதிரியை குறி வைத்து கேவ்ளர் வலையை வீசி அந்த எதிரியை கீழே கொண்டு வரும்.

மேலும் படிக்க