• Download mobile app
10 May 2025, SaturdayEdition - 3377
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

ஆளில்லா விமானங்களை கண்டுபிடிக்க புதிய கருவி

March 23, 2017 தண்டோரா குழு

அமெரிக்காவில் உள்ள ‘ஏர்ஸ்பேஸ் சிஸ்டம்’ என்னும் நிறுவனம் ஆளில்லா விமானங்களை கண்டு பிடிப்பதற்கான கருவியை அறிமுகப்படுத்தியுள்ளது.

வெளிநாடுகளில் ஆளில்லா விமானங்கள் அதிக அளவில் பயன்பாட்டிலுள்ளது. இவைகளை பறக்க விடுவது மிக சகஜமாக இருக்கும். ஆனால், இவைகளை கொண்டு ராணுவ விடுதிகள், ராணுவ தளங்கள், சிறைச்சாலைகள், பொது இடங்களில் வேவு பார்க்கவும் உதவுகிறது. இதை பயன்படுத்தி வெடி குண்டுகளை போடும் வாய்ப்புகளும் உள்ளது.

இது போன்ற ஆபத்தான நேரங்களில், ஆளில்லா விமானங்களை கட்டுக்குள் வைத்திருப்பது அவசியமாக இருக்கிறது. இதற்கான பல வழிகளை அமெரிக்க ராணுவத்தினர் மேற்கொண்டு வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக ‘ஏர்ஸ்பேஸ் சிஸ்டம்’ ஒரு கருவியை உருவாக்கியுள்ளது. இது எதிரியின் ஆளில்லா விமானம் வருவதை அறிந்தவுடன் தளத்திலிருந்து கிளம்பி, மரங்களில் மோதாமல் எதிரியை குறி வைத்து கேவ்ளர் வலையை வீசி அந்த எதிரியை கீழே கொண்டு வரும்.

மேலும் படிக்க